news

News October 5, 2024

WARNING: இந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பை எடுக்காதீங்க!

image

PAK-ஐ சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ்அப் கால் செய்து மோசடி செய்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். +92 என்று தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். போலீஸ் சீருடையில் உள்ள Photoவை DP வைத்து ஏமாற்றுவார்கள் என்றும், நம்பினால் ஏமாந்து விடுவீர் எனவும் எச்சரித்தனர். ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு ஏமாற்றப்பட்டு மாரடைப்பால் இறந்தார். SHARE IT

News October 5, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) நான்கு மூக்குகளை உடைய ஊரும் உயிரினம் எது? 2) RTI சட்டம் என்பதன் விரிவாக்கம் என்ன? 3) ஜைனத்தின் புனித நூல் எது? 4) ஐந்திணை 70 என்ற சங்க நூலின் ஆசிரியர் யார்? 5) சராசரியாக மனிதர்கள் தங்களது வாழ்நாளில் எத்தனை முறை கண்களை இமைக்கின்றனர்? 6) உலகின் ஆட்டோமொபைல் சிட்டி என அழைக்கப்படும் நகரம் எது? 7) உலகில் மிக விஷத்தன்மையுடைய மீன் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 5, 2024

Recipe: ரவா பொங்கல் செய்வது எப்படி?

image

அடுப்பில் சட்டி வைத்து நெய் ஊற்றி, ரவையை (250g) லேசாக வறுத்து எடுக்கவும். அதில் நீரூற்றி நன்கு வேக வைக்கவும். அத்துடன் குக்கரில் மலர வேக வைத்த பாசி பருப்பை (250g) சேர்த்து கிளறவும். மற்றொரு சட்டியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி, பாதியாக இடித்த மிளகு, சீரகம், முந்திரி சேர்ந்து பொன்னிறமாக வறுத்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பை கலவையுடன் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான ரவா பொங்கல் ரெடி.

News October 5, 2024

பஸ் கண்டக்டரிடம் சில்லறை வாங்க மறந்துட்டீங்களா?

image

நீண்டதூர பஸ் பயணங்களின் போது கண்டக்டரிடம் டிக்கெட்டுக்கான மீதி சில்லறையை பலரும் வாங்க மறந்து விடுவார்கள். இந்த பணத்தை திரும்ப பெற ஈஸி வழி இதோ: TNSTC-இன் இலவச டோல் ஃப்ரீ நம்பரான 1800 599 1500-க்கு கால் செய்து, உங்கள் டிக்கெட்டில் உள்ள பஸ் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கூறுங்கள். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கண்டெக்டரிடம் அதிகாரிகள் விசாரித்து, உங்கள் மீதிப் பணத்தை அனுப்புவார்கள். Share It.

News October 5, 2024

பாஜக ஆட்சி அமையும்போது இது நடக்கும்?

image

2026இல் தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது, திமுக ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். நெல்லையில் பேசிய அவர், “திமுக தலைவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்படுகின்றனர். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என டாஸ்மாக் மூலம் மது விற்பனையை திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல்படுகிறது” என்றார்.

News October 5, 2024

பள்ளிகளில் மாணவர் குழு உருவாக்க உத்தரவு

image

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் இக்குழுக்களை உருவாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பு எடுப்பதை குறைப்பது, கல்வியை ஊக்கவிக்க, ஆசிரியர்-மாணவ உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கங்களாகும் என்று கூறப்பட்டுள்ளது.

News October 5, 2024

தனியார்மயமாகிறதா ரயில்வே? அமைச்சர் பேட்டி

image

இந்திய ரயில்வே விரைவில் தனியார்மயமாக்கப்பட இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.இந்நிலையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கப் போகிறது. இது ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம். இனி தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என உறுதிப்படக் கூறினார்.

News October 5, 2024

இறந்தவரும் தந்தை ஆகலாம்.. ஐகோர்ட் நெகிழ்ச்சி உத்தரவு

image

புற்றுநோய் பாதித்த இளைஞரின் உயிரணுவை டெல்லி கங்காராம் ஹாஸ்பிட்டலில் அவரது பெற்றோர் பாதுகாத்து வந்தனர். அவர் இறந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற, மகனின் உயிரணுவை அவர்கள் கேட்டனர். ஆனால், மருத்துவமனை மறுக்கவே, இந்த விவகாரம் டெல்லி ஐகோர்ட்டுக்கு சென்றது. விசாரணையில், உயிரிழந்தவர்களின் உயிரணு மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்ய தடையில்லை எனக் கூறிய நீதிபதி, உயிரணுவை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

News October 5, 2024

ATMகளில் காவலாளிகள் கட்டாயம்: வங்கிகளுக்கு உத்தரவு

image

ATMகளில் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்குமாறு வங்கிகளுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்டோரை காவலாளியாக நியமிப்பதை தவிர்க்குமாறும், பகல், இரவுக்கு தனி காவலாளிகளை நியமிக்குமாறும் கூறியுள்ளது. வாட்ஸ்அப் குழு துவங்கி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ரோந்து போலீசாரிடம் தகவல் பகிருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேவாட் கொள்ளையார்கள் கைவரிசையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

News October 5, 2024

அஜித் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பிரசன்னா

image

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பிரசன்னா ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்குமாருடன் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், “AK சாரின் குட் பேட் அக்லி படத்தில் ஒரு அங்கமாக இருப்பது உண்மை. இது ஒரு கனவு. படத்தில் முதல் சில நாட்கள் நடித்து விட்டேன். அஜித் அவராகவே இருப்பதாலேயே அனைவராலும் நேசிக்கப்படுகிறார். பணிவு நிரம்பியவர். உண்மையானவர்” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!