India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 18வது இடத்தை பிடித்துள்ளது. 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்ற இந்தியா இந்தமுறை கூடுதலாக 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. உங்களுக்கு பிடித்த Moment எது என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.
விக்கிரவாண்டியில் செப்.23ல் தவெக மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. *மாநாட்டால் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்படக்கூடாது *போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் *அனுமதித்த இடம் தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது *முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என அன்புமணி விமர்சித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் 200 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 134 பேர் இலங்கை சிறைகளில் தற்போதும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 184 பேரின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு, CM கடிதம் எழுதினால் போதுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை நீடிக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 – 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேராது என்று பலமுறை தெளிவாக சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் யாரும் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக துணிந்து, தனித்து சந்திக்கும்” எனக் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்., மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கார் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில், பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாகவும், கொலையில் தொடர்புடையோர் உடனடியாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டினார். தனது அனுபவத்தில் அரசுக்கு எதிராக இத்தகைய நம்பிக்கையின்மையை பார்த்ததில்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், நாளை மாலை (அ) இரவில் கரையை கடக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.
இன்று 11 மணிக்கு பொது அறிவு வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ரஷ்யா 2) கிமோனோ 3) வில்லோ மரம் 4) குறிப்பறிதல் 5) கருவிழி 6)15 ஆண்டுகள் 7) புளூட்டோ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துபவர்களை சமூகம் ஒருபோதும் விரும்பாது என மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அமைச்சர் தர்மேந்திர பாபாவை எதிர்த்து அவரது மகள் பாக்யஸ்ரீ (NCP சரத் அணி) போட்டியிடுவது குறித்து பேசிய அவர், ” தந்தையை மகளை விட யாராலும் நேசிக்க முடியாது. தந்தையை எதிர்த்து போட்டி போடுவது சரியல்ல. நானும் அதை அனுபவித்து என் தவறை ஒத்துக்கொள்கிறேன்” என்றார்.
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையின் கிர்கான் பகுதியில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் பிரசவம் நல்லபடியாக நடைபெற்றதாகவும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தீபிகாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ரன்வீர் சிங்குக்கும் தீபிகாவுக்கும் நவம்பர் 2018இல் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே.
Sorry, no posts matched your criteria.