India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சி.பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அரவிந்த் சாமி, நன்றாக நடிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம் என்றும், வேறு யாருக்கும் நான் போட்டி இல்லை என்றும் கூறினார். மேலும், நான் எந்த ரேஸிலும் கிடையாது எனக் கூறிய அவர், எனது நடிப்பை மக்கள் கொண்டாடினாலே போதும்” என்றார்.
சென்னையை சேர்ந்த பெண்ணிடம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது. இந்திய தூதரக அதிகாரி பேசுவதாக மர்ம ஆசாமி ஒருவர் போனில், வெளிநாட்டில் படிக்கும் அப்பெண்ணின் மகன் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவரது மகன் அழுவது போன்ற AI ஆடியோவை அனுப்பி நம்ப வைத்ததுடன், மகனை விடுவிக்க ₹1.75 லட்சம் பணம் கேட்டு பெற்றுள்ளார். பின்னர் தன் மகனிடம் போனில் பேசியபோதே, ஏமாறியது தெரியவந்தது.
➤சீன ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அமெரிக்காவின் கோகோவுடன், செக்குடியரசின் முச்சோவா மோதவுள்ளார். ➤IRE-க்கு எதிரான ODI தொடரை 2-0 என்ற கணக்கில் SA கைப்பற்றியது. ➤ஆசிய யூத் வில்வித்தையில் பெண்கள் அணிகளுக்கான ‘ரீகர்வ்’ பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. ➤உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் 25 M ‘ஸ்டேன்டர்டு பிஸ்டல்’ பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யான்ஷி தங்கப்பதக்கம் வென்றார்.
கோட்டை நோக்கி பிராமணர்கள் பேரணி செல்லவுள்ளதாக இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் டி. குருமூர்த்தி அறிவித்துள்ளார். “பிற சமூகத்தினரை இழிவுப்படுத்தினால் வழக்கு பாய்கிறது. ஆனால், பிராமணர்களை கிண்டல் செய்தால் நடவடிக்கை இல்லை. நிர்மலா சீதாராமனையே இப்படி கிண்டல் செய்கின்றனர். எனவே, பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்றக்கோரி கோட்டை நோக்கி நவ.3-ல் 1 லட்சம் பிராமணர்களுடன் பேரணி செல்வோம்” என்றார்.
➤பாகிஸ்தான் Ex. பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் அலீமா & உஸ்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ➤அக்.7 தாக்குதல் நினைவு நாளை முன்னிட்டு ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ➤ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியது. ➤இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதால், விருது குழு இம்முடிவை எடுத்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே பாலியல் வழக்கில் கைதான அவர், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் உள்ளிட்ட சுமார் 72 போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 லட்சம் பேர் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயிலில் அமர்ந்திருக்கும் இடத்துக்கு ஏற்ப தனிச் சிறப்புகளைக் கொண்டிருப்பவர் பிள்ளையார். அந்த வகையில், பிரகாரத்தின் மேற்குத் திசை நோக்கி சந்நிதி கொண்டிருந்தால், அவருக்கு சர்வப்ரிய மகாகணபதி என பெயர். மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பலிக்கும் முழுமுதற் கடவுளான இந்த கணபதிக்கு சதுர்த்தி விரதமிருந்து அருகம்புல் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் வாழ்வில் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.
பெண்கள், குழந்தைகள் பயணிப்பதற்காக PINK நிற ஆட்டோக்கள், சென்னையில் வலம் வரவுள்ளன. இதற்கான அரசாணையை, தமிழக அரசு இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது. முதல்கட்டமாக, தலைநகர் சென்னையில் 250 PINK ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஓட்டுநராக விரும்பும் பெண்களுக்கு, ஆட்டோவின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். சென்னையை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் PINK ஆட்டோ சேவை வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை விதித்துள்ள மேக்ரான் மற்றும் மேற்கத்திய தலைவர்களால் ஈரான் மீது ஆயுத தடைவிதிக்க முடியுமா என்றார். அவர்களின் ஆதரவு இருந்தாலும், இல்லை என்றாலும் வெற்றிபெறுவோம் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.