India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். நீண்டகால யோசனை மற்றும் கட்ட பரிசீலனைகளுக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
நவீன உலகத்தில் குடும்பம், அலுவலகம் என நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின்பு தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, இந்த 9 மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். 1) லிப்பிட் ப்ரோபைல் 2) ரத்த சோகை 3) வைட்டமின் குறைபாடு 4) பெல்விக் எக்ஸாம் 5) குளுக்கோஸ் 6) மம்மோகிராபி 7)எலும்பு தாது அடர்த்தி 8) டெக்கா ஸ்கேன் 9)கர்ப்பப்பை புற்றுநோய் 10) தைராய்டு பரிசோதனை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (₹1,000) நிபந்தனைகளை தளர்த்தி மேலும் 2.30 லட்சம் பேரை
சேர்க்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹1,000 திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய விண்ணப்பங்கள் விரைவில் அச்சடிக்கப்பட்டு, விநியோகிக்கப்படலாம் என்றும் Ex.அரசு ஊழியர்களின் மனைவிகள், புதிதாக திருமணமான பெண்கள் இத்திட்டத்தில் அக்டோபரில் இணைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களை மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர் “சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது. இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதியை அளிக்கிறது. இதுதான் கல்வியை மேம்படுத்தும் முறையா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து, பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் பொன்னிறமாக வறுத்து எடுத்த தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கையில் சிறிது நெய் தடவி, இந்த மாவை சின்ன உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான கொள்ளு உருண்டை ரெடி.
*ஸ்கின்னி பிட்: தொடையுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும். *ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட்: டெனிம்கள் இடுப்பிலிருந்து விளிம்பு வரை நேராக இருக்கும். *ரிலாக்ஸ்டு ஃபிட்: கோடை காலத்துக்கு ஏற்றவை. *பூட்கட் ரெட்ரோ: விரிந்த கீழ் பாதி இடுப்பளவுடன் சமனாக அமைந்து உயரமாகத் தோன்ற வைக்கும். * லோ ரைஸ்: தொப்புளுக்கு 2 இஞ்ச் கீழே உட்காரும். *மாம் கட்: நீண்ட & சற்று தளர்வான இடுப்பு அளவைக் கொண்டிருக்கும்.
கோவை வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். ஆளுநர் ரவி தலைமையில் நடக்கும் இவ்விழாவை, கடந்த ஆண்டும் அமைச்சர் புறக்கணித்திருந்தார். தொடர்ந்து, இந்த ஆண்டும் அவர் பங்கேற்கவில்லை. ஆளுநர் – தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சமீப காலமாக நடைபெற்ற எந்த பட்டமளிப்பு விழாக்களிலும் திமுக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.
குட்கா முறைகேடு வழக்கில் Ex. மினிஸ்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக Ex. மினிஸ்டர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 27 பேர் மீதும் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அரசின் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
ஹரியானா தேர்தலில் CONG-AAP இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக AAP மூத்த தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு முன் (செப்.12) கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 90 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில், AAP 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. ஆனால், காங்.,5 தொகுதிகளை மட்டுமே தர விரும்புவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – அதிமுக பிரமுகர் வெளியப்பன், சென்னை- ஜெயராஜ், ஆத்துப்பாளையம்- கோகுல், கிருஷ்ணகிரி- பழனி, கோவை- கோகுல், ராமநாதபுரம்- மோகன் ஆகியோர் மதுபோதை உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளதாக எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.