India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Mpox அறிகுறியுடன் இந்தியா வந்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் Mpox வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
2026 தேர்தலோடு அதிமுக அழிந்துவிடும் என்று தினகரன் கூறுவது உண்மைதான் என EX அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இபிஎஸ் தலைமையால் அதிமுகவின் வாக்கு வங்கி 20% ஆக குறைந்துள்ளதாகவும், அதிமுக ஒன்றிணைய கூடாது என்று நினைப்பவர்கள் விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் குறிப்பிட்டார். EPS, OPS, TTV, சசிகலா உள்ளிட்டவர்கள் இணைய வேண்டும் என்றும், 2025இல் இதற்கு தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.
சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று ஒரே நாளில் 6 பேர் <<14057219>>படுகொலை<<>> செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதெல்லாம் CM ஸ்டாலினுக்கு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தம்மை சுற்றி மாய வளையம் அமைத்து TN சொர்க்கபுரியாக திகழ்வதாக நம்பிக் கொண்டிருப்பதாகவும் முதல்வரை விமர்சித்துள்ளார்.
கல்விக் கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என இயக்குநர் அமீர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்துவதை அரசு தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எந்த விதமான தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ இல்லாதவர்களை சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் பள்ளிகளில் பேச அழைக்கக் கூடாது எனவும் கோரியுள்ளார்.
தவெகவின் மாநாடு தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், மாற்றுத் தேதியில் மாநாட்டை நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓலா எலக்ட்ரிக் பங்கின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ₹76க்கு ஐபிஓ வெளியான நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்தையில் பட்டியலிடப்பட்டு ₹157 வரை தொடர் ஏற்றம் கண்டது. லாபம் பார்க்காத இந்நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், தற்போது மளமளவென சரிந்து ₹105இல் வர்த்தகமாகி வருகிறது.
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017இல் அதிமுக எம்எல்ஏக்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.
₹12,380 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாத சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழக அரசு கையப்படுத்த வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 1946இல் சென்னை மாகாண அரசு 160.86 ஏக்கர் கொண்ட இந்த மைதானத்தை (ஆண்டுக்கு ₹614.13) 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் கட்சி தொடங்குவதாக நடிகர் விஜய்யை அமைச்சர் கீதா ஜீவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். எத்தனை கட்சிகள் தொடங்கப்பட்டாலும், திமுக 7ஆவது முறையாக ஆட்சி கட்டிலில் நிச்சயம் அமரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அரசியல் அறிந்தவர்கள் என்றும், மீண்டும் திரைக் கவர்ச்சியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
47 நாட்களுக்கு பிறகு இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் வழி வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜிப்ஸம், இயற்கை எரிவாயு உட்பட 40,000 டன் சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.