India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026இல் ஜப்பானில் (அய்சி நகோயா) நடைபெறவிருக்கும் ஆசியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கென தனி விளையாட்டு கிராமம் உருவாக்கப்படாது என்று JOC அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய JOC முன்னாள் தலைவர் சுனேகாசு டகேடா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக, போட்டியாளர்கள் கிராமத்தில் அல்லாது ஹோட்டல்கள் & சொகுசு கப்பல்களில் தங்கவைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 – 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்ககூடும் என்றும் கூறியுள்ளது.
தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் யாரும் BJP, PM மோடியை கண்டு அஞ்சுவதில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக, 2029 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும், காங்., அந்த தேர்தலில் படுதோல்வி அடையும் எனவும் சாடியுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் MGM மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1)பிளேட்டோ 2)31 ஜனவரி 1976 3) திபெத் & தலாய் லாமாவை இந்தியா ஆதரித்ததே காரணம் 4) ரிப்பன் பிரபு 5) செஞ்சிக் கோட்டை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
டாடா புதிதாக அறிமுகப்படுத்திய CURVV எலக்ட்ரிக் காரை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு பரிசாக அளித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவரை கௌரவிக்கும் விதமாக முதல் காரை வழங்கியுள்ளது. சரியான நபருக்கு முதல் கார் அளிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காரின் விலை ₹17.49 லட்சம் ஆகும்.
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ஜி கர் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதி தெரிவித்துள்ளது. அதேநேரம், பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் என 2 விதமான பணிகளுக்கு அக்.13ஆம் தேதிக்குள் <
TVKவில் செஞ்சி ராமச்சந்திரன் இணையவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என இபிஎஸ் மறுத்துள்ளார். இது போன்ற வதந்தி பரப்புபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு கடல் என்றும், வலிமையான இயக்கம் எனவும் நம்பிக்கை தெரிவித்த அவர், செஞ்சி ராமசந்திரனை போல ஆயிரக்கணக்கான பேர் அதிமுகவில் அங்கம் வகித்து உழைத்து வருவதாகவும் விளக்கமளித்தார்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இயற்கைக்கு மாறான முறையில் அவர் மரணமடைந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க மே.வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய அவர் ஆக. 8இல் படுகொலை செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.