India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என இபிஎஸ் வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? என சாடிய அவர், தினமும் தலைப்பு செய்தியாகும் அளவுக்கு இயல்பாக கொலைகள் நடப்பதே திமுக அரசின் 3 ஆண்டு சாதனை என விமர்சித்துள்ளார்.
கடல் நீரில், உப்பு அதிகமாக காணப்படுவதற்கு காரணம் தெரியுமா? மழை பெய்யும்போது பாறைகள் & மணல் மீது செல்லும் நீர், அவற்றில் இருக்கும் உப்பு & தாதுக்களை எடுத்துக்கொண்டு ஆறுகளில் சேர்க்கிறது. அந்த நீர் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கிறது. கடலில் உள்ள நீரின் அடர்த்தி குறைவு என்பதால், சூரிய வெப்பத்தால் அதன் சிறுபகுதி (நன்னீர்) ஆவியாகி மழையாகப் பொழிகிறது. தாதுக்கள் கடலிலேயே தங்கி நீரை உப்பாக வைக்கிறது.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். ஆளுமையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு, பாலின பாகுபாடு காட்டாமல் அவர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 33% இடஒதுக்கீடு, இன்னும் நடைமுறையில் வராத நிலையில், 50% இடஒதுக்கீட்டை துரைமுருகன் வலியுறுத்துவது ஆச்சரியமளித்துள்ளது.
“மிலாது நபி” பொதுவிடுமுறை தேதியை மாற்றி தமிழக அரசு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்.4ஆம் தேதி பிறை தென்படவில்லை என்பதால், செப்.6ஆம் தேதி முதல் பிறை என்று ஷ்ரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு, செப்.17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செப்.16க்கு பதில் செப்.17ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை மாற்றப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், முதல்கட்டமாக 20 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. AAP-CONG இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இதில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி முறிந்துள்ளது. AAP 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், 7 இடங்களை தர CONG விருப்பம் தெரிவித்தது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் வன்படுகொலை கொடூரம் அரங்கேறி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொணர சுப்ரீம் கோர்ட், தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. RG கர் கல்லூரியின் Ex., முதல்வர் சந்தீப் கோஷ், சஞ்சய் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பேரிடம் CBI வாக்குமூலம் பதிவு செய்ததுடன், 12 பேரிடம் பாலிகிராபி சோதனை நடத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக மே.வங்க அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, டாக்டரின் இறுதிச்சடங்கில் நடந்த கலவரம், பாதிக்கப்பட்ட பெற்றோர் பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, டாக்டர்கள் போராட்டம் & TMC தலைவர்களின் விமர்சனங்கள், மம்தா அரசுக்கு அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான CBI விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகாவுக்கு வர தயாராக இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அப்பாவு குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்.13இல் நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபலமான சந்தீப் கிஷன் தற்போது தமிழிலும் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளதால் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
பேருந்து நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி இன்று மதுரை வந்தார். அப்போது, திடீரென மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர், கழிவறை, டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.