news

News September 9, 2024

தலைமை ஆசிரியைக்கு நாளை வரை கெடு

image

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை நாளை காலைக்குள் எழுத்துப் பூர்வ விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார், அனுமதி வழங்கியது யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு செப்.20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

News September 9, 2024

சற்றுமுன்: “மு.க.ஸ்டாலின் விருது” அறிவிப்பு

image

திமுக தனது 75ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாடவுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் பெயரில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் பெயரிலான முதல் விருது, முன்னாள் MP தஞ்சை S.S.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுவரை, பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் (அன்பழகன்) பெயரில் விருது வழங்கப்படும் நிலையில், முதல்முறையாக ஸ்டாலின் பெயரில் விருது வழங்கப்படவுள்ளது.

News September 9, 2024

சாப்பிட்ட பின் இதை செய்யாதீர்கள்

image

உணவு உண்டபின் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் நடப்பது செரிமானத்திற்கு மிகவும் உதவும். சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதுதான். ஆனால், குளிர்ந்த நீரை குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உடன் உட்காரவோ, படுக்கவோ செல்வது உடல் எடையை அதிகரிக்கும். மேலும், சாப்பிட உடன் டீ, காஃபி குடிப்பது நெஞ்செரிச்சலை உண்டாக்கும் என்றும் கூறுகின்றனர்.

News September 9, 2024

ஹெல்த் இன்சூரன்ஸ் மீது ஜிஎஸ்டி: ஆய்வு செய்ய குழு

image

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து விரிவாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மீது தலா 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவில் விரிவாக ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.

News September 9, 2024

‘G.O.A.T’ வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!

image

கடந்த 5ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘G.O.A.T’ படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளில் இப்படம் ₹126 கோடி வசூலித்திருந்த நிலையில், 4 நாள்களில் ₹288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விரைவில் இப்படத்தின் வசூல் ₹500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 9, 2024

Census தாமதம்: புள்ளியியல் நிலைக்குழு கலைப்பு

image

மக்கள் தொகை கணக்கெடுப்பு காலதாமதம் பற்றி புள்ளியியல் நிலைக்குழு உறுப்பினர்கள் (standing committee on statistics) கேள்வி எழுப்பியதால், அக்குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது. பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட நிலைக்குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 3 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் நடத்தப்படவில்லை.

News September 9, 2024

தமிழ்நாட்டில் விரைவில் HP கணினி உற்பத்தி

image

கணினி உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. தமிழ்நாட்டில் விரைவில் உற்பத்தியை தொடங்குகிறது. ஹெச்.பி. நிறுவனம் Padget Electronics நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ஒரகடத்தில் அமையும் ஆலையால் முதலில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

News September 9, 2024

பள்ளி மாணவர்களுக்கு 5 நாள் விடுமுறை..

image

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் <<14062012>>காலாண்டு <<>>விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 -10ஆம் வகுப்புக்கு செப்.20 – 27 வரை, 11 – 12ஆம் வகுப்புக்கு செப்.19 -27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 9, 2024

மக்கள் அச்சப்பட வேண்டாம்

image

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். இருப்பினும், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனே பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

News September 9, 2024

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் இந்தியா?

image

2045ஆம் ஆண்டுக்குள் நிலவில் சீனா & ரஷ்யா இணைந்து நிரந்தர ஆய்வுக்கூடத்தை அமைக்கவுள்ளது. இந்த மையத்திற்கு மின்சாரம் வழங்க நிலவில் அணுமின் நிலையம் ஒன்றையும் உருவாக்க இருநாடுகளும் முடிவுசெய்துள்ளன. இந்த முயற்சியில், சந்திரயான் மூலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய இந்தியாவை இணைக்க ரஷ்யாவின் Rosatom (அணு சக்தி கழகம்) விரும்புவதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!