India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*அமெரிக்கா: எலான் மஸ்கின் ஸ்பேஸ் X விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்ணில் ஏவிய ‘டிராகன் விண்கலன்’ மூலம் 4 பேர், முதல் வணிக விண்வெளி பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். *வியட்நாம்: யாகி புயல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. *ஈராக்: பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் குண்டு வெடித்தது.
ஹிந்தியை எதிர்க்கவில்லை, அதை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்றே திமுக சொல்வதாக குறிப்பிட்டார். அதனை கட்டாயம் பாடமாக்கக் கூடாது என்ற அவர், இருமொழி கொள்கையில் சமரசம் கிடையாது, இருமொழி கொள்கையால்தான் தமிழகம் இன்று கல்வியில் வளர்ந்துள்ளது என்றும் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 80 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: 10-ம் வகுப்பு, குறைந்தபட்சம் ஓராண்டு கேட்டரிங் டிப்ளமோ படிப்பு. 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 18 முதல் 27 வரை. தேர்வாகிறவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.46,000 வழங்கப்படும். http://www.sci.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பு தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் இன்றும், ஜன.11ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 12ம் தேதி பயணிப்போர் வரும் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி பயணிப்போர் வரும் 15ஆம் தேதியும் IRCTC இணையதளம், ரயில் டிக்கெட் மையங்களில் முன்பதிவு செய்யலாம்.
சிலருக்கு அடிக்கடி கை, கால் மரத்துப் போய்விடும். அவர்களுக்கான சூப்பர் டிப்ஸ்: வால் மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை அரை ஸ்பூன் எடுத்து, அதனுடன் 2 சிறு துண்டு பட்டை சேர்த்து மிதமாக இடிக்க வேண்டும். அதை பாத்திரத்தில் போட்டு, ஒன்றரை கிளாஸ் நீர் ஊற்றி, ஒரு கிளாஸாக வரும் வரை சுட வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மரத்து போதல் பிரச்னை ஓடிவிடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையின் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. SHARE IT
சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் அளித்திருந்த மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாஸிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர், அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக கூறினார். பின்னர், போனில் உதயநிதி விசாரிக்கையில், அதிகாரி கூறியது பொய் என தெரியவந்தது. இதையடுத்து, சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இந்திய திரையுலகையே கலக்கிய படம் அந்நியன். அம்பி, ரெமோ, அந்நியன் என 3 கதாபாத்திரங்களில் விக்ரம் மிரட்டி இருப்பார். இந்நிலையில், இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் சங்கர். இதற்காக ரன்வீர் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விக்ரம், தன்னை வைத்து அந்நியன் 2 படத்தை ஷங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயிலில் தற்போது நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் பார்வதி யானை கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விசாரித்த போது, கடும் வயிற்றுப்போக்கால் யானை அவதிப்படுவதாகவும், அதற்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றி தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கி தரும் பெற்றோர்கள், ஒரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அதில் உள்ள பேட்டரி. பெரிய சைஸ் பேட்டரிகளை விட, பட்டன் பேட்டரிகளை குழந்தைகள் அதிகம் விழுங்குகின்றன. அப்படி விழுங்கும் போது, இந்த பேட்டரிகள் வெடித்து 3 வோல்ட் மின்சாரம் வெளியாகி குழந்தைகளின் உணவுக் குழாயையும், குடலையும் கடுமையாக சேதப்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.