India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எத்தியோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு PM மோடி, ஓமனுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் தனது X பதிவில், ஓமன் இந்தியாவுடன் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலம் என பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பயணம், இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ரயிலில் லக்கேஜ்களுக்கான கட்டணம் உயர்கிறது. குறிப்பிட்ட எடையை தாண்டி லக்கேஜ்களை பயணிகள் தங்களுடன் கொண்டுவந்தால், ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். Second Class: 35 – 70. ஸ்லீப்பர் (SL): 40 – 80 kg, ஏசி 3 டயர்/ சேர் கார்: 40 kg, ஃபர்ஸ்ட் கிளாஸ் & ஏசி 2 டயர்: 50 – 100 kg, ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்: 70 – 150 kg வரை கூடுதல் கட்டணமின்றி கொண்டு செல்லலாம்.

நடிகை ஸ்ரீலீலா, SM-யில் தனது AI புகைப்படம் வெளியானது தன்னை காயப்படுத்தியதாக மிகவும் வருந்தியுள்ளார். இதுகுறித்து அவர், தவறான நோக்கங்களுக்காக AI பயன்படுத்துவதை யாரும் ஆதரிக்க வேண்டாம். இதுபோன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டுமே தவிர, சிரமங்களை உண்டாக்கக் கூடாது. இந்த AI பெண்களை குறிவைத்து தவறாகப் பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

டிவி சீரிஸ் ரசிகரா நீங்க? அப்படினா நீங்க இந்த சீரிஸ் எல்லாம் பாத்துருக்கீங்களா? சமீபத்தில், பயனர்களின் ரேட்டிங் அடிப்படையில் இதுவரை வெளிவந்ததில் சிறந்த 250 டிவி சீரிஸ் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. இதில், இந்திய தொடர்களும் இடம்பெற்றுள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெற இருந்த லக்னோ மைதானத்தில் அதீத பனிப்பொழிவு நிலவியதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதனால், கடைசி போட்டியில் இந்தியா வென்றால், தொடரை கைப்பற்றும். தோற்றால் தொடர் சமன்செய்யப்படும்.

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்ய, ரயில்வே சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, காலை 5 – மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான Chart, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தயார் செய்யப்படும். மதியம் 2:01 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையிலான ரயில்களுக்கு, 10 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும். முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே இது தயாரிக்கப்பட்டது.

டெல்லியில் பெருகிவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், SC பழைய வாகனங்கள் தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, “நகர நுழைவாயில்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக நீக்க வேண்டும். BS‑IV & அதற்கும் மேற்பட்ட வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நீண்டகால திட்டம் வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பால் & பால் பொருள்களில் கலப்படம் நடப்பதை தடுக்க சிறப்பு அமலாக்க பணியை தொடங்க, அனைத்து மாநில அரசுகளுக்கும் FSSAI உத்தரவிட்டுள்ளது. பனீர், கோவா ஆகியவற்றில் நடக்கும் கலப்படம் & தவறான பிராண்டிங் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பால் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே தென் மாவட்டங்கள், டெல்டாவின் சில பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நாளையும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, காலையில் வாகனங்களில் செல்வோர் ஹெட்லைட்டை ஆன் செய்தவாறே செல்லுங்கள். குளிருக்கு தேவையான ஆடைகளை இப்போதே அணிந்து கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.