India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஏப்ரல் 16- சித்திரை- 03 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12 : 00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7 : 30 AM – 9:00 AM ▶ குளிகை: 10 : 30 12 :00 AM ▶ திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி கேகேஆர் Vs சஹால் என்று தான் இருந்தது. 111 என்ற இலக்கை கூட தொட முடியாமல் 95 ரன்களுக்கு KKR ஆல் அவுட் ஆனது. இந்த ஐபிஎல் சீசனில் இதுதான் மிகவும் மோசமான ஸ்கோர். இப்போட்டியில் சஹால் 4 விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் IPL-லில் அதிக முறை 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். முன்னதாக சுனில் நரேன் 8 முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
‘எம்புரான்’ வெற்றிக்கு பிறகு ஹிந்தியில் உருவாகும் ‘தாய்ரா’ படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். ராசி, தல்வார், சாம் பகதூர் உள்ளிட்ட படங்களை இயக்கிய பெண் இயக்குனர் மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்குகிறார். முதல்முறையாக கரீனா கபூருடன் பிரித்விராஜ் இணைந்து நடிக்க உள்ளார். பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதற்காகவே ஆர்வமாக இப்படத்தை ஒப்புக்கொண்டதாக கரீனா தெரிவித்துள்ளார்.
அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மமதா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஊடுருவல்காரர்களை தடுக்க தவறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.
➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – களிப்பு ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – பகை ➤கன்னி – வரவு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – பிரீதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உழைப்பு ➤கும்பம் – யோகம் ➤மீனம் – பணிவு.
கடந்த ஐபிஎல் சீசனில் KKR அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், நடப்பு ஆண்டு பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக, இன்றைய த்ரில் போட்டியில் ஷ்ரேயசின் கேப்டன்சி முடிவுகள் பாராட்டுகளை பெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, பவுலர்களை கச்சிதமாக பயன்படுத்தியது, குறைவான ரன்கள் என்றாலும் வெற்றிகரமாக defend செய்தது என்று அவர் கலக்கியிருக்கிறார்.
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆணையர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார். மேலும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களில் மர்மமான அலறல்கள், மாய உருவங்கள், விவரிக்க முடியாத உணர்வு, தற்கொலைகள் என அமானுஷ்ய நடமாட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது: *டிமான்ட்டி காலனி *பெசன்ட் கார்டன் *புரோக்கன் பிரிட்ஜ் *வால்மீகி நகர் *பெசன்ட் அவென்யூ ரோட் *ECR சாலை *கரிகாட்டுக் குப்பம் *சென்னை கிறிஸ்தவ கல்லூரி (ஒரு அறை) *புளூகிராஸ் ரோட் *திருவண்ணாமலை ஹாண்டட் ஹவுஸ். உங்கள் ஊரில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கா?
Sorry, no posts matched your criteria.