India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன், தனது முதலாம் ஆண்டு திருமண தினத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்டுள்ளார். நீதானே என் பொன் வசந்தம், கனா, கண்ட நாள் முதல் ஆகிய சீரியல்களில் நடித்த தர்ஷனா, கடந்த ஆண்டு இதே நாளில் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பை அவர் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1,57,908 பேருக்கு HIV தொற்று (எய்ட்ஸ்) இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 25,000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். HIV தொற்று, பாலியல் உறவின் மூலம் மட்டுமே அதிகம் பரவுவதால், காண்டம் அணிவது போன்ற பாதுகாப்பான பாலியல் உறவை தேர்ந்தெடுங்கள். HIV தொற்றை குறைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.
சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், நாதக-வுக்கும் எந்த தொடர்புமில்லை என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள், அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார். அதில் வரும் கருத்துக்களுக்கு நாதக பொறுப்பேற்காது எனவும் சீமான் கூறியுள்ளார். துரைமுருகனின் சமீபத்திய செயல்பாடுகள், உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக இந்த அறிக்கை வந்துள்ளது.
டாய்லெட்டில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் பல நோய்கள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால், Posture பிரச்னைகள் வரக்கூடும். குடல், இரைப்பை சார்ந்த நோய்கள், வயிற்றுப்போக்கு, மூல பாதிப்பு ஏற்படும் அபாயங்களும் உள்ளன. மேலும், கழிப்பறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் ஒட்டிக் கொள்வதால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்களை ஏற்படுத்தும்.
தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
போயிங் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டாய்லெட்டில் சிக்கிக் கொண்டுள்ளார். டாய்லெட்டின் தாழ்ப்பாள் பழுதானதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த USA விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து போயிங் விமானங்களின் பிரச்னைகளை சரி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ₹29.16 கோடி செலவில் 2,612 விமானங்களின் டாய்லெட் தாழ்ப்பாளை மாற்ற போயிங் முடிவு செய்துள்ளது.
சனி பகவான், வரும் ஜூலை 13-ல் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் நேர்மறை பலன்கள் அடையும் ராசிகள்: *கன்னி: வேலை, தொழிலில் முன்னேற்றம். காதல், திருமண வாழ்க்கை சிறக்கும். வீடு, வாகன யோகம் *மீனம்: ஆரோக்கியம், ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் *மகரம்: அதிர்ஷ்டம் சாதகமாகும். வெற்றி கிடைக்கும். வாய்ப்புகள் தேடிவரும், மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார். அதேபோல், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஏப்ரல் 14ஆம் தேதியை அம்பேத்கர் தினமாக அறிவித்தார்.
வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை கைது செய்ததற்கு 125 ஆண்டு பழமையான ஒப்பந்தமே காரணமாம். சுதந்திரத்திற்கு
முன்பாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் 1907 ல் இரு நாட்டுக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், பணமோசடியில் சிக்குவோரை பரஸ்பரம் நாடு கடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அது தான் வங்கியை மோசடி செய்த சோக்ஷியை பிடிக்க உதவியிருக்கிறது.
பிரபல இயக்குநரும் திரைப்பட நடிகருமான <<16108100>>S.S.ஸ்டான்லி(58) காலமானார்.<<>> இவரின் மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின், இன்று மாலை சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் நாசர், பிரகாஷ், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.