India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் ரேங்கிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, பவுலர் தரவரிசை பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், ஜடேஜா 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடத்தையும், அஸ்வின் 2ஆவது இடத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
குறை ரத்தத்தைக் காட்டிலும், உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. அறிகுறிகளை முன்கூட்டியே உணர முடியாததாலேயே HBP-ஐ ‘Silent Killer’ என மருத்துவர்கள் கூறுகின்றனர். கட்டுப்படுத்தாத HBP (120/80mmhg மேல்) இதய செயலிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பல சிக்கல்களை உண்டாக்கலாம். 20 – 35 இளவயது மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி மயக்கம், நெஞ்சு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன் ரேங்கிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டாப் 20 பட்டியலில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளார். ரிஷப் பண்ட் 6ஆவது இடத்தையும், ரோஹித் ஷர்மா 10ஆவது இடத்தையும், கோலி 12ஆவது இடத்தையும், ஷுப்மன் கில் 14ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதை மீறி மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், சிறுவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பினால், பெற்றோருக்கு ₹25,000 அபராதம், வாகன உரிமம் ரத்து மற்றும் வழக்குப்பதிவு செய்து 3 மாத சிறைத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் இளம் பெண் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஜெர்மனியில் 32 H ஆகவும், ரஷ்யாவில் 40 H ஆகவும் உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஊடகம் மற்றும் ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் வாரத்திற்கு 56.5 H, அறிவியல், தொழில்நுட்ப துறையில் 53.2 H, ஆசிரியை 46 H பணியாற்றுகின்றனர். நீங்கள் எவ்வளவு நேரம் பணியாற்றுகிறீர்கள்?
DRDOவில் 200 இடங்களுக்கு அப்ரண்டிஸ் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. GRADUATE அப்ரண்டிஸ், டெக்னிசியன் அப்ரண்டிஸ், டிரேடு அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. வயது வரம்பு 2024 ஆகஸ்ட் 1 தேதிப்படி 18 ஆகியிருக்க வேண்டும். கல்வி தகுதி உள்ளிட்ட பிற விவரங்களை drdo.gov.in. தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
இன்று 10 மணிக்கு <<14189211>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) 3.2 அடி 2) எட்வர்ட் ஜான்ஸ்டன் 3) Securities & Exchange Board of India 4)பாவோ கிறிஸ்டாடஸ் 5) ஐராவதம் மகாதேவன் 6) O ரத்த வகை 7) ஸ்டேமன்ஸ் & பிஸ்டில் இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
சித்தராமையாவுக்கு எதிரான நில ஒதுக்கீடு முறைகேடு குற்றச்சாட்டு குறித்து வழக்கு பதிந்து விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி மனைவிக்கு நிலங்களை ஒதுக்கியதாக சித்தராமையா மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சினேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது.
விவசாய சட்டம் குறித்த பேச்சுக்காக கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில், விவசாய சட்டத்தை மீண்டும் கொண்டுவர பிரதமரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கும்படி அவர் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், விவசாய சட்டத்தை ஏற்கெனவே பிரதமர் திரும்ப பெற்றதால் கட்சியின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு எனக் கூறிய அவர், தன் பேச்சை திரும்ப பெறுவதாகத் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி பால் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்துள்ளது. நிபந்தனைகளை மீறி, நெய்யில் கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயில் பிரசாத லட்டுக்கு பயன்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதாகவும், நெய்யை ஏ.ஆர். டெய்ரி விநியோகித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.