India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களை அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க TN அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோரை கண்டுபிடித்து கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும், நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
விஜயதரணி தேர்தலுக்கு முன்பு, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அப்போது MLA பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில், குஷ்புவின் ராஜினாமாவால் காலியான NCW உறுப்பினர் பதவி அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட தோஷம் நீக்க திருமால் வழிபட்ட திருத்தலம் ராணிப்பேட்டையை அடுத்த கரிவேடு அரிபிரசாதேஸ்வரர் திருக்கோயிலாகும். இங்குள்ள இறைவனுக்கு பல்லவன் திரிபுவன வீரகண்டன் கற்றளி கோயில் எடுப்பித்தாக ஸ்தல புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, பாதாள லிங்கேஸ்வருக்கு அபிஷேகம் செய்து, வில்வம் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால் தீராத பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.
மத்திய அரசின் பஞ்சாப் & சிந்த் வங்கியில் ஸ்பெஷல் ஆபீஸர் நிலையிலான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலைமை மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட 42 பதவிகளில் காலியாக உள்ள 213 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை punjabandsindbank.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தேர்தலுக்கு முன்பு மநீமவில் இருந்து விலகியோருக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க கமல் முடிவு செய்து விண்ணப்பம் கோரியிருந்தாராம். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அவர்களை நியமிக்க போவதாகவும் கூறியிருந்தாராம். இதனால் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், பொதுக்குழுவில் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், ஏமாற்றம் அடைந்து, அவரை விமர்சிக்க தொடங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
சமீபத்தில் பணிச்சுமை காரணமாக கேரளவைச் சேர்ந்த இளம் பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த நிலையில், தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் சதப் பாத்திமா(45) என்ற பெண் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. 30 மற்றும் 1ஆம் தேதியன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கான் அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும் என அந்த அணியின் ODI கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் என்றார். ஆனால் அவர் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியின் பெயரை குறிப்பிடவில்லை. இதற்கு பாக்., அணியின் சமீபகால ஃபார்மே காரணமாக செல்லப்படுகிறது.
விக்கிரவாண்டியில் அக்.27 ஆம் தேதி நடைபெறும் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.