India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விரைவில் ஆண்டுக்கு ₹8.36 லட்சம் கோடி அன்னிய நேரடி (FDI) முதலீட்டை இந்தியா பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா உள்ளதால் FDI குவிந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா, தற்போது ஆண்டுக்கு ₹5.85 – ₹6.69 லட்சம் கோடி இந்தியாவுக்கு FDI கிடைப்பதாகக் கூறினார்.
➤தாய்லாந்து ஆடவர் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராமநாதன் – மட்சுய் ஜோடி முன்னேறியது. ➤U20 Asian Football: தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் மங்கோலியாவை இந்திய அணி வீழ்த்தியது. ➤Macau ‘Super 300’ Badminton: முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் டேனிலை வீழ்த்தினார். ➤இந்தியா – வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.
பொருள் வாங்க மட்டுமன்றி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் ரேஷன் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து புதிதாக அட்டை கோரி 2,89,591 பேர் மனு அளித்துள்ளனர். இதை பரிசீலித்து, தேர்தலுக்கு பிறகு 1.22 லட்சம் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 80,050 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 99,300 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 68,291 பேருக்கு விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அரசு முறை பயணமாக டெல்லி செல்கிறார். நாளை மாலை பிரதமரை சந்திக்கவிருக்கும் அவர் பள்ளிக் கல்வித்துறை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தவுள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியினை தமிழகத்திற்கு மத்திய அரசு நிறுத்தியது. மேலும், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.
தனது ஆதரவாளர் வைத்திலிங்கம் மீதான வழக்குப்பதிவை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், இபிஎஸ் ஆதரவாளர் வேலுமணி மீதான வழக்குப்பதிவுக்கும் ஓபிஎஸ் கண்டனம் கூறியிருந்தார். இதை அதிமுகவினர் யாரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக இணைப்புக்காக ஓபிஎஸ் மிகவும் கீழ் இறங்கி வந்திருப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கறீங்க? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024-25ஆம் நிதியாண்டில் 7%ஆக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7%ஆக இருக்குமென கணித்ததை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதேபோல், 2025-26இல் இந்தியாவின் பாெருளாதார வளர்ச்சி 7.2%ஆக இருக்குமெனவும் ADB கூறியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு குறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான வழக்கில் காலை 10.30க்கு தீர்ப்பு வெளியாகவுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவர், கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்து வருகிறார். பலமுறை அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த SC ஜாமின் மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
➤தீஸ்தா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வங்கதேசத்தின் நீா்வளத் துறை முடிவு செய்துள்ளது. ➤இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக தென் லெபனானில் இருந்து பெய்ரூட் நோக்கி லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ➤இஸ்ரேலின் மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி முதன் முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
AUS எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ENG கேப்டன் ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் சதமடித்து (110 ரன்கள்) எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், 13 ஆண்டு கால சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் (25 வயது 215 நாள்கள்) ODI-யில் சதமடித்த இளம் ENG கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றார். முன்னதாக, அலஸ்டர் குக் 26 வயது 190 நாள்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களை www.careers.ntpc.co.in இணையதளத்தில் காணலாம்.
Sorry, no posts matched your criteria.