India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதயநிதிக்கு துணை CM பதவி அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு, புரட்டாசிக்கு பிறகு வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிடப்படி தேய்பிறை நாள் நடப்பதால் அறிவிப்பு வெளியாகவில்லை, தேய்பிறை முடிந்ததும் CM ஸ்டாலின் ஓகே சொன்ன அடுத்த நொடி அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு அமைச்சரவையில் முக்கிய துறையை அளிப்பது குறித்து ஆலோசனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்க் கவிதை உலகின் முன்னத்தி ஏராக இருக்கும் ஈரோடு தமிழன்பன், முகநூல் வழியாக எழுதிய கவிதைகளை ‘ஓடையின் முறையீடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ‘ஆற்றை அழைத்துக் கொண்டு போனால் கடலாகலாம். காற்றை அழைத்துக்கொண்டு போனால் இசையாகலாம்’ என்பது போன்ற வரிகளை இந்த நூலில் படித்து ரசிக்கலாம். கவிதையின் ஊடாக இயற்கையை நேசிக்கும் வாசிப்பு பிரியர்களுக்கு இந்நூல் நிச்சயம் நல்ல அனுபவத்தை அளிக்கும்.
துலிப் கோப்பை தொடரில் கோலி மற்றும் ரோஹித்துக்கு சலுகை வழங்கியதற்கு முன்னாள் வீரர் மஞ்ரேக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களும் துலிப் போட்டியில் விளையாடிய போது, இவர்களுக்கு மட்டும் சலுகை என்பது, மற்ற வீரர்களை அவமதிப்பதை போல் உள்ளதாகக் கூறியுள்ளார். இருவரும் துலிப் போட்டியில் விளையாடியிருந்தால், வங்கதேச அணியிடம் திணற வேண்டிய அவசியம் இருந்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் (RMC) எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. SHARE IT
அறநிலையத்துறையா? வசூல்ராஜாவா? என இந்துசமய அறநிலையத்துறை பணிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் கோயில் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பணியை மட்டுமே அறநிலையத்துறை செய்கிறது. முறையாக பராமரிப்பு பணிகளை செய்வதில்லை என்று அதிருப்தியை வெளியிட்டனர்.
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதித்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நமச்சிவாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தனிவார்டில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள் என்பதை INDIAகூட்டணித் தலைவர்கள் நிரூபித்திருப்பதாக காங்., எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி ஜாமின் குறித்து பேசிய அவர், “அநீதியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட INDIA கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றியடைந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
பூமியை இன்று ராட்சத எரிகல் நெருக்கமாக கடந்து செல்லவுள்ளது. 2024 SN என்ற எரிகல் விண்வெளியில் சுற்றி வருகிறது. அது இன்று பூமிக்கு அருகே 24,30,000 மைல் தொலைவுக்கு வரவுள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு அடுத்தடுத்து பூமிக்கு அருகே எரிகல்கள் நெருக்கமாக சென்று வருகின்றன. அதனடிப்படையில் எரிகல் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தியாகம் செய்தா செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார் என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது, அவரை வரவேற்று ஸ்டாலின் பதிவிட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்ததே திமுகதான் என்று கிண்டலடித்தார்.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்குவது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் கருத்து சொல்ல முடியாது என்றார். ஆனால், SB அமைச்சராக எந்த தடையையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சராக SBக்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.