news

News October 18, 2024

செயற்கைக்கோளில் இருந்து சேவை வழங்கும் BSNL?

image

VIASAT செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக சேவை வழங்கும் சோதனையை BSNL வெற்றிகரமாக செய்துள்ளது. வயாசாட் நிறுவனம் BSNL உடன் இணைந்து ‘டைரக்ட் டூ டிவைஸ்’ என்ற நேரடி சேவை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல நெட்வொர்க் இணைப்பு ஏதுமின்றி, இருவழி தகவல் & அவசரகால அழைப்பான SOS ஆகியவற்றை செயற்கைக்கோளுக்கு அனுப்பி சோதனை செய்துள்ளது.

News October 18, 2024

தவறான புகார்: ரூ.4.2 லட்சம் நஷ்ட ஈடு

image

தொழிலதிபர் அளித்த தவறான புகாரில் தொழிலாளி ஒருவர் 6 மாதங்கள் சிறையில் இருந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 9 பேர் கொண்ட கும்பல் தன்னை வாள், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தொழிலதிபர் கூறியது பொய் என தெரியவரவே, தொழிலாளிக்கு நஷ்ட ஈடாக ரூ.4.2 லட்சம் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News October 18, 2024

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் எலான் மஸ்க்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார் நம்.1 பில்லியனர் எலான் மஸ்க். அவ்வகையில், டிரம்ப்பின் கொள்கைகளான பேச்சு சுதந்திரம், துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கும் வாக்காளருக்கும், பரிந்துரைப்பவருக்கும் (சில மாகாணங்களில் மட்டும்) தலா 100 டாலர் பணம் தரப்படும் என அறிவித்துள்ளார்.

News October 18, 2024

BREAKING: ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகின்றன. இது அரபிக் கடலில் 12 மணி நேரத்தில் உருவாகி, வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்ல உள்ளது. வங்கக் கடலில் 22ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அதே வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News October 18, 2024

பாகிஸ்தானை விட இந்தியாவில் வறுமை அதிகமா?

image

உலகில் மொத்தம் 110 கோடி பேர் கொடிய வறுமையில் வாழ்ந்து வருவதாக ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் பாதி பேர் (48.1%) இந்தியா, பாக்., எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ (DRC) ஆகிய 5 நாடுகளில் உள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானை (9.3 கோடி) விட இந்தியாவில் தீவிர வறுமையில் இருப்போர் (23.4 கோடி) அதிகம். மனிதவளக் குறியீட்டில் பின்தங்கிய நாடுகளிலும், தீவிரவாதம்- போர் அதிகமுள்ள இடங்களிலும் வறுமை அதிகமாக உள்ளது.

News October 18, 2024

Apply Now: ₹40,000 சம்பளம்… மத்திய அரசில் வேலை!

image

NTPC நிறுவனத்தில் காலியாகவுள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பொறுப்பில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: B.Sc (Agriculture Science). வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹40,000+ சலுகைகள். தேர்வு முறை: எழுத்து & நேர்காணல் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.28. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>NTPC <<>>லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 18, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: வெளியான திடுக் தகவல்!

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவும், தன்னை கொன்று விடுவார் என்ற அச்சம் காரணமாகவும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை கைதான 28 பேரில், 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

News October 18, 2024

சதம் விளாசினார் ரச்சின் ரவீந்திரா

image

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் NZ வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தியுள்ளார். 134 ரன்கள் முன்னிலையுடன் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய NZ அணி தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய பொறுப்புடன் விளையாடிய அவர் 124 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம், இந்தியாவிற்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்தார்.

News October 18, 2024

சைனஸை விரட்டி அடிக்கும் கருந்துளசி தேநீர்

image

மழைக்காலத்தில் ஏற்படும் தீவிர சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கருந்துளசி தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கருந்துளசி இலை, சுக்கு, மிளகு,மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கருந்துளசி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 18, 2024

SHOCKING: 3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர்

image

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிக அரிய பிறவி குறைபாடான இது ‘டிரிஃபாலியா’ என அழைக்கப்படுகிறது. முதன் முதலாக 2020ல் ஈராக்கில் இக்குறைப்பாட்டுடன் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது 78 முதியவரின் சடலத்தை ஆய்வு செய்ததில், அவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது தெரிந்தது. வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே அவர் வாழ்ந்திருக்காலம் எனத் தெரிகிறது.

error: Content is protected !!