India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது ➤தண்ணீரே அருந்தாமல் காபி, டீ குடிப்பது ➤சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது ➤வெறும் வயிற்றில் Pain Killer மாத்திரைகளை சாப்பிடுவது ➤உடற்பயிற்சி செய்த பின் தண்ணீர் அருந்தாமல் இருத்தல் போன்ற விஷயங்களை தொடந்து செய்தால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பலருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.

KKR அணியின் புதிய ஹெட் கோச்சாக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, கொல்கத்தா அணியில் ரோஹித் சர்மா இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுக்கும் விதமாக, KKR அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானின் ஃபேமஸ் படமான ‘Don’ படத்தில் இடம்பெற்ற ‘Sun will rise tomorrow again ye toh confirm hai, but at (K)night’ என்ற வசனத்தை குறிப்பிட்டு, MI போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பதில் அளித்துள்ளது.

தமிழக காவல் துறையில் புதிதாக ‘செய்தி தொடர்பாளர்’ என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு முத்தரசி IPS நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டம், ஒழுங்கு உதவி ஐஜியாக உள்ள இவர், சென்னை செய்தி மக்கள் தொடர்பு SP ஆக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தொடர்பான அறிக்கைகள், புகார்கள் குறித்த நிலவரங்கள் ஆகியவற்றை ஊடகங்களை சந்தித்து வழங்கும் பணியை இவர் செய்வார்.

சமீப காலமாக அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், சில நேரங்களில் தலைவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். தான் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால், தனிக்கட்சி தொடங்குவது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார். அதேநேரம், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

High Knees செய்வதால் கால் தசைகள் வலுப்பெற்று, ஒட்டுமொத்த உடல் எடையும் குறைய உதவுகிறது ★செய்வது எப்படி: முதலில் நேராக நிற்கவும். ஒரு காலை மடக்கி, முட்டியை மார்பு உயரம் வரும்படி உயர்த்தவும் ★பிறகு மறு காலை, அதேபோல் செய்யவும் ★இவ்வாறு இரு கால்களையும் மாற்றி, ஓடுவது போல தொடர்ந்து செய்யவும் ★தொடக்கத்தில் தினமும் 1 நிமிடம் வரை செய்து பழகி, பின்னர் மெதுவாக முடிந்தளவு நேரத்தை அதிகரிக்கலாம். SHARE IT.

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (நவ.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹4.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,750-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுகவிலிருந்து நேற்று Ex அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவை தன்வசப்படுத்திய EPS, சசிகலா, OPS, TTV உள்பட பல முக்கிய புள்ளிகளை நீக்கியுள்ளார். 2017-ல் CM ஆனது முதல் EPS நீக்கிய அதிமுக பெரும்புள்ளிகள் யார் யார் என்று, மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

பித்ரு சாபத்திற்கு ஆளானவர்கள் & வருடம் ஒருமுறை கூட குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், வாழைத்தண்டு திரியால் தீபம் ஏற்றுவது பாவங்களில் இருந்து விடுபட செய்யும் என கூறப்படுகிறது. இந்த கடைகளிலேயே கிடைக்கும். இல்லையென்றால், வீட்டிலேயே மரத்தில் இருந்து வாழைத்தண்டை பிரித்து எடுத்து, நாரை வெயிலில் காய வைக்கவும். இந்த காய வைத்த நாரை கொண்டு அகல் தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போடுங்கள்.

சில படங்களில் கதாநாயகிகளை விட, அவர்களுடைய தோழிகளாக வரும் துணை நடிகைகள் கவனம் ஈர்ப்பர். அப்படி, ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக வந்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் சூர்யா, பவன் கல்யாண், ரன்பீர் கபூர் ஆகியோருடன் நடிப்பேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் நடித்திருந்தாலும், சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை.

இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலை 6 ஆண்டுகளாக ஸ்மிருதி மந்தனா காதலித்து வருகிறார். இதனிடையே, விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக பலாஷ் அறிவித்தார் இந்நிலையில், இவர்களது திருமணம், நவ.20-ல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மிருதியின் சொந்த ஊரான MH-ன் சங்க்லியில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு திருமணம் செய்வாரா ஸ்மிருதி?
Sorry, no posts matched your criteria.