India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலய்யாவின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ள இப்படம், வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ளதாம். ஏற்கெனவே ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களில் பாலய்யா உடன் நயன்தாரா நடித்திருக்கிறார். சமீப காலமாக கோலிவுட்டில் நயனுக்கு சரியான வெற்றி அமையாத நிலையில், டோலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்.

திமுகவினர் சாதனையை சொல்லி வாக்கு கேட்காமல், மக்களிடம் சத்தியம் வாங்கி ஓட்டு வாங்குகின்றனர் என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவை எதிர்த்து பேசினால் தன்னை RSS, BJP-காரன் என்கின்றனர், பாஜகவை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலி என்கின்றனர், ஆனால் ஒருவரும் ஒரு பைசா கூட தருவதில்லை என்று தெரிவித்தார். SIR நடவடிக்கையில் சதி இருப்பது உண்மை தான் என தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார்.

இன்றைய ஜெனரேஷனின் மிகப்பெரிய சாபமே, ஸ்மார்ட்போன்தான். தொடர்ந்து 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தியவர்களின் மூளையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றனர். 72 மணிநேரம் போன் பயன்படுத்துவதை நிறுத்தி இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களின் மூளை தன்னைத் தானே Reboot செய்துகொண்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) $119 குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹10,492 குறைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி $240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் பெரிய அளவில் சரிந்து $3,994-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னர்தான் உள்நோக்கத்துடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தவெக, சென்னை HC-ல் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முன்கூட்டியே அனுமதி அளித்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாது என கூறியது. நிபந்தனைகள் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என HC அறிவுறுத்தியுள்ளது.

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ
சனிப் ப்ரசோதயாத்
பொருள்:
ஓம், கொடியில் காக்கையை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள். SHARE IT.

கரூர் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர். இதன்பிறகு அறிக்கை, வீடியோ என பனையூரிலேயே இருந்தார் (இருக்கிறார்) விஜய். சரி, பாதிக்கப்பட்டவர்களையாவது நேரில் சென்று பார்ப்பார் என்று பார்த்தால், ஆறுதல் கூறும் பாணியையே மாற்றி சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த ஆறுதல் நிகழ்ச்சியை கூட ஊடக வெளிச்சமின்றி நடத்தியுள்ளார். இது அவரது கட்சியினருக்கே அயற்சியை தருவதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

‘டியூட்’ பட இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் சாய் அபயங்கர். கருப்பு, மார்ஷல், அட்லீ – அல்லு அர்ஜுன் படம் என அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியாக உள்ளார். இந்நிலையில், ‘சாய் – விஜய் காம்போ மிஸ் ஆவது வருத்தமாக இருக்கிறது’ என்று ரசிகர் ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவிட, ‘எனக்கும் வருத்தம் தான்’ என்று பதிலளித்துள்ளார் சாய். விஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ உள்ளதால், இந்த காம்போ அமையாது.

மொன்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ளதால், கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.

சுப்மன் கில், ஆஸி.,க்கு எதிரான தொடரில் தோல்வியுற்றார். கில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜிம்பாப்வேக்கு (2013) எதிரான ODI தொடரை 5-0 என கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதில் 197 ரன்களையும் கோலி குவித்தார். இலங்கைக்கு (2017) எதிரான ODI தொடரை 2-1 என வெற்றி பெற்ற ரோஹித்தின் நீலப்படை வென்றது. ரோஹித் மட்டும் 217 ரன்களை குவித்தார். ஆஸி.,க்கு (2007) எதிரான தொடரில் தோல்வியுற்றது தோனியின் கேப்டன்சி.
Sorry, no posts matched your criteria.