India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாமகவிற்குள் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். தந்தை & மகன் இடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக, கட்சிக்கு தானே தலைவர் என்று ராமதாஸ் அறிவித்துக் கொண்டார். ‘நான் தான் தலைவர்’ என்று அன்புமணியும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், வரும் பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து கலந்து கொள்வார்கள் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் விழாவில் ரேடியோ அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (27), அவரது மனைவி லலிதா (25), பாட்டி பாக்கியம் (75) நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, அவர்களது குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ரீ-ரிலீஸ் கலாசாரம் தமிழ் சினிமாவில் சமீபமாக தலை தூக்கத் தொடங்கியுள்ளது. விஜய்யின் சச்சின் படம் ஏப்.18-ல் மீண்டும் ரிலீசாகும் நிலையில், அஜித்தின் வீரம் படமும் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன், வல்லரசு ஆகியவற்றை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவுள்ளது. அவர் படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?
வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உ.பி.யில் இளம்பெண்னை (17) ஒருவரை அவரது வருங்கால கணவரின் கண்முன்னே 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை POCSO-வில் 8 பேர் கைதாகி இருக்கின்றனர். அவர்களில் கைதான, அகிலேஷ் பிரதாப் சிங் லோக்கல் BJP காஸ்கஞ்ச் பகுதியின் MLA-வுடன் நெருக்கமாக இருப்பவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 18 நாள்களில் மட்டும் 4 முறை UPI பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஒரு நிமிடம் செயலிழந்தாலும், 4 லட்சம் பேர் பாதிப்பார்கள். நாடு முழுவதும் 40 கோடி பேர் UPI பரிவர்த்தனையை நம்பியிருக்கும் சூழலில், அடிக்கடி செயலிழந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்புகின்றனர் நிதி நிறுவன நிர்வாகிகள். இதற்கு தீர்வு காண மத்திய அரசின் NPCI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
அதிமுக குறித்து அதிமுக <<16095694>>Ex MLA குணசேகரன்<<>> பேசுவது நல்லதற்கு அல்ல என அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாலர் கார்த்திக் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேசக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்க கருத்து என்ன?
NCERT ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்பு இந்தியில் மாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CBSE பாடநூல்களின் தலைப்புகள் ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ் என இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதாக கேரள அமைச்சர் சிவன் குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். NCERT தொடங்கி நாள்தோறும் MPக்களுக்கு எழுதும் கடிதம் வரை இந்தியை திணிப்பதா என மதுரை MP சு.வெங்கடேசனும் கண்டித்துள்ளார்.
அடுத்தடுத்த அரிவாள் வெட்டு சம்பவங்கள் தென் மாவட்டங்களை அதிரச் செய்துள்ளன. பாளையங்கோட்டையில் பள்ளிக்குள் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோன்ற சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. காதலியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டு காதலித்த பெண், திடீரென பேசாமல் ஒதுங்கியதால் அவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு பெற்றதற்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக பேரவையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு அவரும் நன்றி கூறினார்.
Sorry, no posts matched your criteria.