India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள், நம்மை கேன்சரில் இருந்து காக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ★ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி ★ தரமற்ற ஓட்டல் உணவுகளுக்கும், ஃபாஸ்ட் ஃபுட்களுக்கும் NO ★ புகையிலை, கூல்டிரிங்ஸ், மதுப்பழக்கத்தை கைவிடுதல் ★ இரவில் 8 மணிநேர தூக்கம் ★ பாக்கெட் உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் ★ மனநலத்தை சீராக வைத்திருத்தல்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் இ-பைக்கை நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவை பார்க்கும்போது அது சிங்கிள் சீட்டராக இருக்கலாம் என்றும், கிளாசிக் மாடலாக இருக்கும் என்றும் தெரிகிறது. வீடியோவில் இ- பைக் குறித்து ஏதும் அறிவிக்காததால் பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், E-Class LWB கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் பிரேக் & அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, வீடியோ கான்பரன்சிங் வசதி இடம்பெற்றுள்ளன. 5 புது வண்ணங்களில் E200, E220D & E450 ஆகிய 3 வேரியண்ட்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹79 – ₹93 லட்சமாகும்.
மகளிர் T20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் AUS, NZ, SA, WI ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, பாக்., இலங்கை, இங்கிலாந்து, வ.தேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் நாளை (அக்.17) மற்றும் அக்.18 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி அக்.20 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
விஜய் ஆண்டனி தயாரித்து, நடிக்கும் ‘ககன மார்கன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி, சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் முன்னறிவித்துள்ளது.
இன்று 11.30 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நெருப்புக்கோழி 2) கோமோடோ பல்லி 3) இலங்கை 4) விலாங்கு மீன் 5) Crime Branch Crime Investigation Department 6) 36 ஆண்டுகள் 7) K2 சிகரம் (சீனா-பாக் எல்லை). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) மத்திய அரசு உயர்த்தி அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. தீபாவளி பரிசாக அகவிலைப்படியை 3% உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 49 லட்சம் ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். இத்தொகை ஜூலை 2024 முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டும், பண்டிகை காலத்திலேயே 4% DA உயர்த்தப்பட்டது.
மழைக்காலத்தில் ஏற்படும் நெஞ்சு சளி, தொண்டை வறட்சி, இருமல், உடல்வலி, கீழ்வாதம் & சைனஸ் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மஞ்சள் பாலைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அழற்சி எதிர்ப்பு & ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்ட மஞ்சளை பசும்பாலில் கலந்து ஏலக்காய், இஞ்சி, மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான மஞ்சள் பால் ரெடி.
வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் பேட்டி அளித்த அவர், கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அவர் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.