India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Android, Google Chrome OS பயனர்களுக்கு மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. Chrome 129.0.6668.100, 129.0.6668.89 பிரவுசர்கள், Android 12, 12L, 13, 14, 15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்ச குறைபாடுகளை பயன்படுத்தி கணினிகள், மொபைல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளைத் திருடக்கூடும். இதைத் தவிர்க்க உடனடியாக அதை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT.
வெனிசுலாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எலான் மஸ்க் ₹8,400 கோடி செலவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஜூலையில் நடந்த அதிபர் தேர்தலில் மதுரோ 3ஆவது முறையாக மீண்டும் வென்றார். ஆனால், தேர்தலில் அவர் மோசடி செய்ததாக எலான் மஸ்க் விமர்சித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நீடிக்கிறது. இந்நிலையில் மதுரோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
IND-NZ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், போட்டி கைவிட அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில், இத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மழைக்காலத்தில் ஏற்படும் சூழலியல் மாற்றம் (வெப்பம் குறைவதால்) காரணமாக வைரஸ், பாக்டீரியா தொற்றுப்பரவல் அதிகரிக்கும். இந்த சூழலில் மனித உடலில் நோய் எதிர்ப்பாற்றலும் குறையும். இதனால் எளிதில் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இந்நேரத்தில், காடை, சாலமன் மீன், மஞ்சள், இஞ்சி, பூண்டு, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பெர்ரி, தினை வகைகள் உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
பழைய ₹100 நோட்டுகள் செல்லாது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள RBI, இத்தகவல் தவறானது எனவும், பழைய மற்றும் புதிய ₹100 நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், பழைய ₹100 நோட்டுகளை காலக்கெடு, கட்டணம் எதுவுமின்றி எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
கனமழையில் மீட்பு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், இன்று கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், சென்னையில் எங்கும் வெள்ளம் தேங்காமல் வடிந்திருப்பதே பழனிசாமிக்கான வெள்ளை அறிக்கை என அவர் பதிலடி கொடுத்தார்.
சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்றது. நேற்று பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
1) இரு விரல்கள் மட்டுமே கொண்ட பறவை எது? 2) மிகப் பெரிய பல்லி இனம் எது? 3) உலகின் மிகப் பெரிய கண் வங்கி எந்த நாட்டில் உள்ளது? 4) நாயைவிட பல மடங்கு மோப்ப சக்தி கொண்ட மீன் எது? 5) உலகின் 2ஆவது உயரமான சிகரம் எது? 6) CBCID என்பதன் விரிவாக்கம் என்ன? 7) ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைத் தொகுத்து முடிக்க எத்தனை ஆண்டுகளானது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ஒரு சவரன் ₹57,120க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ஒரு கிராம் ₹7,140க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.