news

News October 16, 2024

ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது எப்படி?

image

ரத்த அழுத்தத்தை சீராக வைக்க சில பரிந்துரைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். அவை என்னென்ன? 1) டயட்டை தொடர்ந்து கடைபிடித்தல் 2) உப்பை குறைந்த அளவில் சேர்ப்பது 3) தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் 4) உடல் எடையை சீராக பராமரித்தல் 5) மதுவை தவிர்த்தல் 6) புகைபிடிப்பதை கைவிடுதல் 7) சரியான நேரத்தில் தூங்கி எழுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.

News October 16, 2024

அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை!

image

ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அத்தியாவசிய சேவை துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 16, 2024

டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு

image

பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், கனமழை பெய்யும் பகுதிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள், நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் நிலை ஆகியவற்றை கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு அதிதீவிர படையின் 6 பேரிடர் மீட்புக் குழுக்களை சந்தித்தும் அறிவுரை வழங்கினார்.

News October 16, 2024

நீர்நிலைகள் அருகே வசிப்பவரா நீங்கள்? இதை படியுங்க

image

மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிகனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பினால் குடியிருப்புக்குள் நீர் நுழைய வாய்ப்புண்டு. எனவே வீட்டில் உள்ள பொருள்களை உயரமான இடத்தில் எடுத்து வைக்க வேண்டும். பணம், நகை உள்ளிட்ட அதிக விலை மதிப்புடைய பொருள்களை பத்திரமாக வைக்க வேண்டும். மழையின்போது மரத்தின்கீழ் ஒதுங்குவதை தவிர்க்க வேண்டும்.

News October 16, 2024

10 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு- தென்கிழக்கு திசையில் 440 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ. தூரத்திலும், நெல்லூரில் இருந்து 530 கி.மீ. தூரத்திலும் நிலை காெண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News October 16, 2024

நாளை சூப்பர் மூன்

image

நாளை (அக்.17) பவுர்ணமி ஆகும். தொடர்ந்து இந்தாண்டில் 3ஆவது முறையாக இந்தாண்டில் பூமிக்கு மிக நெருக்கமாக நிலா வருவதால் அதன் தோற்றம் மிகப் பெரிதாகவும், அதிக பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இக்காட்சியை நாளை மாலை 4.56 மணி முதல் 3 நாள்கள் வரை காண முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த முழு நிலவு ஹன்டர் மூன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News October 16, 2024

உஷார்: உடனே இதை செய்யுங்க

image

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அடுத்த சில நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் கீழ்காண்பவற்றை செய்வது நலமாகும். 1) மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை முழுவதும் சார்ஜ் செய்து கொள்ளுங்கள் 2) பால், பிஸ்கட், பிரட் இருப்பு வைத்து காெள்ளுங்கள் 3) வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிரப்பி கொள்ளுங்கள் 4) வீட்டில் போதிய குடிநீர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE IT.

News October 16, 2024

நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே கரையை கடக்கவுள்ளது.

News October 16, 2024

புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை.. SB அறிவுறுத்தல்

image

மின்தடை குறித்து பெறப்படும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்காெண்டார். மின்னகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளும் உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கவும், புகார்தாரரிடம் பேசி குறைகள் சரி செய்யப்பட்டதை உறுதி செய்தபிறகே புகாரை முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

News October 16, 2024

நேருவின் பொன்மொழிகள்

image

*செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சும் கோழைக்கு வெற்றி வெகுதூரம் *முயற்சியுடன் செயல்படுவோரையே வெற்றி தழுவும் * வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும் *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகில் மகிழ்ச்சியான மனிதன் * விளைவுகளை வைத்தே செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும் * உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது. SHARE IT

error: Content is protected !!