news

News September 18, 2024

ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு

image

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 58.85% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 77.23%, குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின், தேர்தல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News September 18, 2024

அரசியல் அதிகாரம் முக்கியம்: வினேஷ் போகத்

image

அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கமளித்துள்ளார். ”அதிகாரத்தில் இல்லாவிட்டால், இங்கு எதுவும் செய்ய முடியாது. ஒலிம்பிக்ஸில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வெல்லலாம். ஆனால், அது அரசியல் அதிகாரத்துக்கு ஈடாகாது. ஒரே இரவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த நாடும் முடங்கியது. அதுவே, அரசியல் அதிகாரத்தின் சக்தி. பிரிஜ் பூஷனும் அந்த அதிகாரத்தை வைத்தே தப்பிக்கிறார்” என விமர்சித்தார்.

News September 18, 2024

அமீர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

image

ஜாபர் சாதிக் மீதான பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் 12ஆவது நபராக சேர்க்கப்பட்டுள்ள அமீர், சட்டவிரோதமாக பணத்தை கையாண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

News September 18, 2024

BREAKING: எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு

image

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

News September 18, 2024

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

image

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயதான நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. துபாயிலிருந்து நாடு திரும்பியவருக்கு பரிசோதனை செய்ததில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியான நிலையில், இந்தியாவில் இது 2ஆவது பாதிப்பாகும்.

News September 18, 2024

ஃபெப்சி அமைப்புக்கு நடிகர் சங்கம் கண்டனம்

image

திரைத்துறையில் நிலவும் பொது அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க ஃபெப்சி நிர்வாகம் முயற்சிப்பதாக, நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி கூட்டுக்குழு அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், திரைத்துறை சிக்கல்களுக்கு ஃபெப்சி நிர்வாகமே தீர்வு காண்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் குறை கூறியுள்ளது.

News September 18, 2024

இந்தியாவுக்கு ஸ்கெட்ச் போடும் சீனா!

image

அருணாச்சல், லடாக் ஆகிய பிராந்தியங்களை அபகரிக்க, கடந்த காலங்களில் சீனா பல முயற்சிகளில் ஈடுபட்டது. எனினும், இந்திய ராணுவம் அவற்றை முறியடித்தது. இந்நிலையில், அருணாச்சல் எல்லையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் மிகப்பெரிய ஹெலிபோர்ட்டை (Heliport) சீனா கட்டமைத்து வருகிறது. இதன் மூலம் இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் எளிதாக ஊடுருவ முடியும்.

News September 18, 2024

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

மத்திய ஆசிரியர் தேர்வுக்கு(CTET ) அக்.16 வரை விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://ctet.nic.inஇல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, டிச.1 காலையில் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் 2ஆம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News September 18, 2024

‘கங்குவா’ நாளை ரிலீஸ் தேதி

image

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

News September 18, 2024

மைக்கேல்பட்டி வழக்கில் மதமாற்ற முயற்சி இல்லை: CBI

image

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலையில், மதமாற்ற முயற்சிகள் நடக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் CBI தெரிவித்துள்ளது. தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில், 17 வயது மாணவி கடந்த 2022ல் தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்தை தழுவ நெருக்கடி கொடுத்ததால் உயிரை மாய்த்து கொண்டதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், இதர பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக CBI கூறியுள்ளது.

error: Content is protected !!