India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பரப்புரை செய்யவுள்ள இடத்திற்கு அருகே வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டிரம்பை ஏற்கெனவே 2 முறை கொல்ல முயற்சி நடந்ததால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அப்படி இருந்தும், நியூயார்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் அவர் பிரசாரம் செய்யவுள்ள இடத்திற்கு அருகே இருந்த காரில் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் ஒரு நாளைக்கு 100 முறை போன் செய்து தொந்தரவு கொடுத்த கணவனை போலீசார் கைது செய்தனர். தெரியாத எண்ணில் இருந்து தொடர் அழைப்புகள் வருவதை கூறியும் கணவர் அதை பொருட்படுத்தாததால் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கணவருடன் இருக்கும்போது மட்டும் அழைப்புகள் வராததால் புகார் அளித்தார். மனைவி இன்னொரு ஆணுடன் பேசியதால் பொறாமை, possessiveness-க்கு ஆளானதால் இவ்வாறு செய்ததாக கணவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அல்லாத ஒருநாள், டி20 போட்டிகளில் (White Ball) முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணியை ஆல்அவுட் செய்து ஆஃப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் RSA அணி பறிகொடுத்தது. AFG தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 4, அல்லா கசன்ஃபர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 14 ஓவர்கள் முடிவில் AFG அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
இன்ஸ்டாவில் 13-17 வயது வயதுடையவர்களின் பாதுகாப்புக்கு புதிய நேர கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செல்பி வீடியோ, நண்பர் பட்டியல் மூலமாக பயன்பாட்டாளர்களின் வயது ஆய்வு செய்யப்படும். நண்பர் பட்டியலில் இல்லாதவர்கள் இன்ஸ்டா விவரங்களை பார்க்கவோ, மெசேஜ் அனுப்பவோ முடியாது. டீன் ஏஜ் வயதினர் அதிக நேரம் இன்ஸ்டாவை பயன்படுத்துவதால், உடல், மனரீதியான பாதிப்பு ஏற்படுவதால், இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி ஏன் பேச வேண்டும். நாம் பேசி, பேசி அவரை பெரிய ஆளாக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலகலப்பாக கூறினார். மேலும், முன்பு பள்ளிகள் அருகே இனிப்பு, புளிப்பு மிட்டாய்கள் கிடைக்கும், ஆனால், தற்போது கஞ்சா கிடைக்கிறது என்று திமுக அரசை சாடினார். மது ஒழிப்பு மாநாட்டுக்கு திமுகவை திருமாவளவன் அழைத்தது வேடிக்கையானது எனவும் விமர்சித்தார்.
சீனியர் வீரர்களுடனான சுமூக உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என கம்பீர் தெரிவித்துள்ளார். முன்பு அணியில் ஆடியபோது ட்ரெஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்களாக இருந்தவர்கள் தற்போது சீனியர் வீரர்களாக மாறிவிட்டதாகவும், சக வீரர்களாக இருந்தபோது கிடைத்த அனுபவம், பயிற்சியாளர் – சீனியர் வீரர்கள் உறவு மேம்பட உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து வீரர்களுடனும் நல்ல வகையில் உறவை பேணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘கூலி’ படத்தில் நாகர்ஜுனா நடித்துள்ள ஆக்சன் காட்சி இணையத்தில் லீக்கான நிலையில், அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேதனை தெரிவித்துள்ளார். பலரின் 2 மாத கடின உழைப்பு, ஏதோவொரு ரெக்கார்டிங் மூலம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, ஒரு படைப்பின் உணர்வை கெடுக்காதீர்கள் என்பதே தனது வேண்டுகோள் எனவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘கூலி’ படத்தில் நாகர்ஜூனா நடித்த ஆக்ஷன் காட்சி இணையத்தில் லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சி வைரலாகி வருகிறது. வெள்ளை நிற கோட் அணிந்துள்ள நாகர்ஜுனா, சுத்தியலால் ஒருவரை கொடூரமாக தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிரைம் த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.
திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு டான்ஸரான இளம்பெண் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் தலைமறைவாகியுள்ளார். இவர் நடனம் அமைத்த ‘புட்ட பொம்மா’, ‘காவாலா’, ‘அரபிக் குத்து’ ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதியம் பல இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்ததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.