India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NPS வாத்சல்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு குறைந்தது ₹1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இது ஒரு பென்சன் திட்டம் என்பதால், குழந்தைகளின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு இத்திட்டம் உகந்தது அல்ல.
தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39ஆக உயர்ந்தது. அமெரிக்க பெடரல் <<14137150>>ரிசர்வ் வட்டி விகிதம்<<>> அதிரடியாக 0.5% குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு குறைந்ததால், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் தாக்கம் பங்குச்சந்தையிலும், இந்திய தங்க சந்தையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3.32 கோடி மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், 28 லட்சம் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 23.43 லட்சம் விவசாய இணைப்புகளில், 4.23 லட்சத்துக்கு மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியா – வங்கதேச அணிகள் மோதவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. ₹200, ₹400, ₹1,000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு போடப்படும்.
*1778 – அமெரிக்காவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. *1893 – உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1898 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் புகழ் பெற்ற சொற்பொழிவு நிகழ்த்தினார். *1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. *1965 – அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.
தன்னை ஆதவ் அர்ஜுனா பின்னால் இருந்து இயக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை இயக்கி, படம் வெளியிடுவதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை என்றார். மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனாதான் ஐடியா கொடுத்தார் என்பது உண்மையில்லை எனக் கூறினார். மேலும், இது மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுதானே தவிர, எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 4 லட்சம் பேர் பாம்பு கடியால் நிரந்தர மாற்றுத்திறனாளி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பாம்பு கடிக்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஓபன் பிரிவு 7ஆவது சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்திய அணி, 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் குகேஷ் வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா, அர்ஜூன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் டிரா செய்தனர். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது. ஈரான் (13), உஸ்பெகிஸ்தான் (12) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5% குறைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 4.75% – 5% வரம்பிற்குள் இருக்கும். கொரோனா பேரிடருக்கு பிறகு முதல்முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த எதிரொலியாக, தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள் போன்ற நுகர்வோர் கடன்களின் வட்டி விகிதமும் குறையும்.
*உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல. மழைதான் பூக்களை வளர்க்கிறது, இடி அல்ல. *கதவின் பூட்டு நீங்கள்தான் என்று நினைக்கிறீர்கள். ஆனால் சாவியே நீங்கள்தான். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *பயணம் உங்கள் வாழ்க்கையில் ஆற்றலையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது. *வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும்.
Sorry, no posts matched your criteria.