India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த அவர், சூட்கேஸ் வீசப்பட்ட இடத்திற்கு அருகே வசித்து வந்துள்ளார். இவர் ஒருவர் மட்டுமே கொலை செய்தாரா மேலும் சிலர் ஈடுபட்டார்களா என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது. மணலியை சேர்ந்த தீபா 3 நாள்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பல சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு லோக்சபாவில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது NDA-க்கு 293 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 362 பேரின் ஆதரவு தேவை. ராஜ்யசபாவில் NDA-க்கு 115 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், கூடுதலாக 49 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே வரும் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறுவது கடினம் என்றே தெரிகிறது.
1) ) தந்தி கருவிகள் என அழைக்கப்படுவது எது? 2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? 3) காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி? 4) காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? 5) உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? 6) தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் <<14137755>>துண்டு துண்டாக<<>> வெட்டி கொல்லப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் மணலியை சேர்ந்த தீபா (32) என்றும், திருமணமாகாதவர் என்பதும் தெரியவந்துள்ளது. வேறு எங்கேயோ அவரை கொலை செய்து விட்டு, இங்கு வந்து கொலையாளிகள் வீசிச் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
BAN எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறி வருகிறார்கள். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளனர். முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா (6), கில் (0), கோலி (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் மட்டும் 17 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத் மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இன்றைய பிள்ளைகள் சத்தான உணவுகளை சாப்பிடாமல் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக, மருத்துவர்கள் டிப்ஸ் ஒன்றை பரிந்துரைக்கிறார்கள். விதை நீக்கிய நெல்லிக்காய் ஒன்றினை 4 துண்டுகளாக வெட்டி, பிள்ளைகளின் வாட்டர் பாட்டிலில் போடுங்கள். இதனால் நெல்லியின் வைட்டமின் C உடலில் சேர்வதுடன், இயற்கையாகவே PH அதிகம் உள்ள அல்கலைன் நீராக அது மாறிவிடுகிறதாம். Share It.
தங்கம் விலை சவரனுக்கு ₹55,000ஐ தொட்ட நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ஒரு சவரன் ₹54,600க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ஒரு கிராம் ₹6,825க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ₹96க்கும், கிலோவுக்கு ₹96,000க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்படாது என தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார். கடும் வெயிலுக்குப் பிறகு எதிர்பார்த்தபடி மழை தொடங்கியுள்ளதாகவும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். அத்துடன், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் வெயில் குறைந்து ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில், “ரேஷன் அரிசி திருடுவது, நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல், இணையதள கூலிப்படையை இயக்குவது உள்ளிட்டவை பற்றி தகவல் தர விரும்பினால், எனது செல்போன் எண் 94874 64651-ஐ தொடர்பு கொள்ளவும். I am Waiting என பதிவிட்டுள்ளார். நாதக கட்சியினருக்கும், எஸ்.பி. வருண்குமாருக்கும் அண்மையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயது இளைஞருக்கு Mpox நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அண்மையில் அவர் UAEல் இருந்து திரும்பியுள்ளார். காய்ச்சலால் மருத்துவமனை சென்றபோது, வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், நோய் தொற்று தெரியவந்தது. தொடர்ந்து, தமிழக எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.