India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் அரசியலுக்கு வர Red Giant Movies-சே காரணம் என ADMK EX அமைச்சர் மணிகண்டன் குற்றஞ்சாட்டினார். ஒட்டுமொத்த சினிமாவையும் உதயநிதி ஆக்கிரமித்துள்ளதாகவும் சாடினார். விஜய் மது ஒழிப்பு கொள்கையை பின்பற்ற உள்ளதாகவும், முதல்வராகி முதல் கையெழுத்து அதற்கானதாக இருக்கும் என அறிவிப்பார் என்றும் கூறினார். இதனை உளவுத்துறை மூலம் அறிந்து, திருமாவை வைத்து மது ஒழிப்பு மாநாட்டை ஸ்டாலின் முன்னெடுப்பதாக விமர்சித்தார்.
மத்திய அரசின் New India Assurance நிறுவனத்தில் 170 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் 50 நிர்வாக அலுவலர் (Accounts) பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. 120 நிர்வாக அலுவலர் (Generalists) பணியிடங்களுக்கு சிஏ, ICWAI உள்ளிட்ட கல்வித் தகுதி வேண்டும். www.newindia.co.in-ல் செப்.29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு http://www.newindia.co.in/recruitment/ list.
டெலிகாம் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட், ரூ.92,000 கோடியை செலுத்துமாறு அவற்றுக்கு 2019-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டெலிகாம் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு CM ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். BJPன் வறட்டு கவுரவத்திற்காகவே இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்ற இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது என்றும் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த, சிக்கலான தேர்தல் முறையை கருத்தில் கொள்ளாத இத்திட்டம் சாத்தியமற்றது என்றும் அவர் கணித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். தேர்தலின் போது தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் அரசு பணியிடங்களில், இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறிய திமுக, அதனை ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். போட்டி தேர்வு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டு குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்குமாறும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் SWOT போலீசார் பெங்களூருவில் அவரை கைது செய்த நிலையில், அங்கிருந்து ஹைதராபாத் அழைத்துச்சென்றுள்ளனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. அவர் படங்களில் பணியாற்ற ஏற்கெனவே, தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கென ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. அதை நாடாளுமன்றம் ஏற்கும் பட்சத்தில் முதலில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். ஏதேனும் காரணத்தால் ச இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல், ஏற்பட்டால் மீதமுள்ள காலத்துக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் முடிந்த 100 நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இவை அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அதுவே 3 தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படும். மக்களவை, சட்டப்பேரவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 18 சட்ட திருத்தம் செய்ய குழு பரிந்துரைத்துள்ளது. இவற்றில் பலவற்றுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என கூறியுள்ளது.
இந்தியாவில் 1951-1967 வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 1968, 1969 இல் சில மாநில சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. 1970ல் மக்களவையும் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இதனால் ஒரே தேர்தல் முறை மாறி, சுழலுக்கு ஏற்ப தேர்தல் நடத்தப்படுகிறது. மத்திய பாஜக அரசு, ஒரே தேர்தலில் உறுதியாக உள்ளது. திட்டம் மசோதாவாகி சட்டமானால் ஒரே தேர்தல் விரைவில் சாத்தியம் ஆகும்.
BAN எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் IND அணி 34 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து, ஜெய்ஸ்வால் மற்றும் பந்த் கூட்டணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 23 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்த நிலையில், ஜெய்ஸ்வால் (37), பண்ட் (33) ஆகியோர் கிரீஸில் உள்ளனர். முன்னதாக, கோலி, ரோஹித், கில் ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.