India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
EY என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த அன்னா செபாஸ்டியன் (26) மரணம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புனேவில் உள்ள அந்நிறுவனத்தில் பணிபுரிந்த அப்பெண், நான்கே மாதங்களில் கடும் பணிச்சுமையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது இறுதிச்சடங்கில் ஒரு அலுவலக ஊழியர் கூட கலந்துகொள்ளவில்லை. இது, பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
‘புஷ்பா- 2’ படத்தில் வரும் நடிகர் அல்லு அர்ஜுனைப் போன்று, கையில் துப்பாக்கியுடன் டேவிட் வார்னர் கெத்தாக நடந்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ‘புஷ்பா’ படத்தின் தீவிர ரசிகரான வார்னர், இதற்கு முன்பு ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு அல்லு அர்ஜுனைப் போன்று ஸ்டெப் போட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அதேபோல், ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறியபோதும் சிறப்பாக ஆடிய அஸ்வின் 102*, ஜடேஜா 86*, ஜெய்ஷ்வால் 56 ரன்கள் எடுத்துள்ளனர். வங்கதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசன் மஹ்மூத் 4, ராணா, ஹசன் மிராஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தனுஷின் 52ஆவது படத்திற்கு ‘இட்லி கடை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தனுஷ் இயக்கும் நான்காவது படமாகும். இதில் அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என சமீபத்திய பேட்டியில் நித்யா மேனன் தெரிவித்து இருந்தார். இந்த படத்தை DAWN Pictures நிறுவனம் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் முதல் படமாகும்.
டெல்லி – மும்பை நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கு எலி தான் காரணம் என கூறிய ஊழியரை ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. எலி அல்லது அதுபோன்ற சிறிய விலங்குகள் பள்ளம் தோண்டியதால் நீர் கசிந்து சாலையில் பள்ளம் உருவானதாக அவர் கூறியிருந்தார். பராமரிப்பு மேலாளராக இருந்த அவருக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சொந்த மண்ணில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மொத்தம் 108 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 100* ரன்கள் அடித்துள்ளார். இது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது 6வது சதமாகும். மறுமுனையில் நிதானமாக ஆடிவரும் ஜடேஜா 79* ரன்களுடன் களத்தில் உள்ளார். சற்றுமுன் வரை இந்தியா 330/6 ரன்கள் எடுத்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் இன்று காலை சல்மான் கானுடன் வாக்கிங் சென்றார். அப்போது அவர்களை ஒரு பைக் வழிமறித்தது. பின்னால் இருந்த பர்தா அணிந்த பெண், பைக்கில் இருந்து இறங்கி வந்து சலீம் கானிடம், ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு போன் செய்யவா எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். ஏற்கனவே அந்த ரவுடியிடம் இருந்து அவருக்கு மிரட்டல் வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
INDvBAN டெஸ்ட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டதாகக் கூறி, டெஸ்ட் போட்டியை தடை செய்யுமாறு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்டபோதும், தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக ஆடிவரும் ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து வங்கதேசத்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் 73 பந்துகளில் 50* ரன்கள் அடித்துள்ளார். சிறப்பாக ஆடிவரும் அஸ்வின் 73* ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி தற்போது வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
டிரம்ப் – மோடி சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) மறுக்கவோ அல்லது உறுதியோ செய்யவில்லை. வரும் 21ஆம் தேதி நடக்க உள்ள QUAD மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். பிரதமரின் இந்த 3 நாள் பயணத்தின் போது, மோடியை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால், பிரதமருக்கு பல சந்திப்புகள் இருப்பதாக மட்டும் MEA குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.