India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்பீரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என நம்புவதாக டிராவிட் தெரிவித்துள்ளார். ஒரு வீரராக கம்பீர் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளதாகவும், பயிற்சியாளராக சிறிது காலம் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு சூழலிலும், ஒருவர் தன்னுடைய அனுபவங்களையும், திறனையும் வெளிப்படுத்துவார் என்பதால், கம்பீரின் அனுபவங்கள் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியால் பாகிஸ்தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்ற காங்கிரசின் வாக்குறுதியை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஆதரித்துள்ளதாகவும், பாக்.கின் கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்த துடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதயநிதி மனைவி கிருத்திகா பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, ஆசிரியர்கள் உடனே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் இது புரளி என தெரியவந்துள்ளது. முதல்வர் குடும்பத்தினரின் பெயரிலேயே மிரட்டல் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டுவை சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், திருப்பதி லட்டு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம். கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை பாகு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்படுகிறது. அதிகரித்துவரும் திருப்பதி லட்டிற்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக இப்பொருள்களின் விகிதங்கள் இதுவரை 6 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு கச்சத்தீவை தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயாராக இல்லை. இந்தியாவுக்கு காஷ்மீர் எப்படியோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு எனக் கூறியுள்ளார். தமிழக அரசியல் தலைவர்கள் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.
சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ உள்ளூர் அரசியலைப் பேசுகிறது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. சதீஸ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’, ஆதி நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘கடைசி உலகப்போர்’, யோகிபாபுவின் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ ஆகிய படங்கள் நாளை வெளியாக உள்ளது. எந்த படத்தை காண விரும்புகிறீர்கள் என கமெண்ட் பண்ணுங்க.
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு மட்டுமின்றி மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக National Dairy Development Board ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் எண்ணெய் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், தேங்காய், பாமாயில், மாட்டுக்கொழுப்பு, விலங்குகளின் கொழுப்பு ஆகியவையும் சேர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்.2வது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்ததால், TNPSC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1990 ஆரம்பத்தில் பேஜர் சேவை அறிமுகமானது. மருத்துவம், போலீஸ், செய்தித்தாள் துறை அனைத்திலும் உடனடி தகவலுக்கு அதை பலரும் பயன்படுத்தினர். 1995களில் அறிமுகமான செல்போன் சேவை, பேஜர் சேவையையும் சேர்த்து SMS ஆக வழங்கியதால் வரவேற்பு குறைந்தது. இதனால் நாளடைவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை சரியவே, 2013 மத்தியில் பேஜர்க்கு மூடுவிழா நடத்தப்பட்டது. பேஜர் சத்தம் ஓய்ந்து இந்தியாவில் 11 ஆண்டுகளாகி விட்டன.
உதயநிதி கண்டிப்பாக ஒரு நல்ல நாள் பார்த்துதான் துணை முதல்வராக பதவியேற்பார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் இன்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், ‘திமுகவினர் பகுத்தறிவாளர்கள். தற்போது நல்ல நாள் இல்லாத காரணத்தால் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்கவில்லை. கண்டிப்பாக விரைவில் ஒரு முகூர்த்த நாளில்தான் அவர் துணை முதல்வராக பதவியேற்பார்’ என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.