India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜேஷ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படத்தின் ஆடியோ மற்றும் டீசர் நாளை மறுநாள் (செப்.21) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின் ஹாரிஸ் இசையமைத்துள்ள ஒரு படம் வெளியாவதால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நம்ம ஊரில் உயர் ரக ஒரு கிலோ அரிசி ₹150க்கே கிடைக்கலாம். ஆனால், ஒரு கிலோ அரிசி ₹15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்புவீர்களா? அது எங்கே என்றால், ஜப்பானில்தான். கின்மேமை என்ற இந்த விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் மட்டும் விளைகிறது. காப்புரிமை பெற்ற முறையில் கின்மேமை பயிரிடப்படுவதாகவும், சுவை மிகுந்த இந்த அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டின் 53 ஆண்டுகால வரலாற்றில், அதிக ஒருநாள் போட்டிகளை (250) நடத்திய மைதானம் என்ற சாதனையை ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் படைத்துள்ளது. 1982ல் உருவான ஷார்ஜா மைதானம், 1984ல் முதல் ஒருநாள் போட்டியை நடத்தியது. ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் 182, சிட்னி கிரிக்கெட் மைதானம் 161, மெல்போர்ன் மற்றும் இலங்கையின் ஆர்.பிரேமதாசா மைதானங்கள் தலா 151 போட்டிகளை நடத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்து அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.
சைந்தவி திரும்பவும் வீட்டுக்கு வரவேண்டும் என ஜி.வி.பிரகாஷ்குமாரின் தாயார் ஏ.ஆர்.ரெய்ஹானா விருப்பம் தெரிவித்துள்ளார். சைந்தவியை போல் ஒரு நல்ல பொண்ணை பார்க்க முடியாது எனவும், தனது மகளுடன் கூட இந்தளவுக்கு தான் உரையாடியது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விவாகரத்துக்கு GV சொல்லும் காரணங்களை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, விழுப்புரம், திருவள்ளூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்தியாவிலேயே கடந்த 2 நாட்களாக அதிகபட்ச வெயில் பதிவான மதுரையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
<<14143448>>ஆம்ஸ்ட்ராங் <<>>கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்., மதிப்பு நிலைத்திருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (செப்.20) இரவு 8 மணியிலிருந்து செப்.23ஆம் தேதி காலை 6 மணி வரை இணையதளம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதமும் ஆகஸ்ட் 29 முதல் செப்.2 ஆம் தேதி வரை இதே காரணங்களுக்காக இணையதள சேவை செயல்படவில்லை.
தண்டவாளத்தில் 6 அடி நீள இரும்பு கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் பிலாஸ்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் இரும்பு கம்பி இருந்துள்ளது. லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக லோகோ பைலட் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ராகுலுக்கு தமிழக BSP கடிதம் எழுதியுள்ளது. அதில் காங்., தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இக்கொலையில் தொடர்பு இருப்பதாக திமுக, பாஜக, அதிமுக, காங்., உள்ளிட்ட கட்சியினர் கைதானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.