India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் சினிமா எத்தனையோ திரைப்படங்களை வழங்கியுள்ளது. ஆனால், சில இயக்குநர்களின் தனித்துவமான படைப்புகள் மட்டுமே காலம் கடந்தும் கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில், இயக்குநர் மிஷ்கினும் ஒருவர். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், ‘லியோ’, ‘மாவீரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் நடிகராகவும் வென்றுள்ளார். 53ஆவது பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துகள்.
அக். 1ஆம் தேதி முதல் செல்போன் பயனாளர்களுக்கு SMS மூலம் அங்கீகரிக்கப்படாத இணைய இணைப்புகள் வராது என TRAI தெரிவித்துள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், பயனர்களை பாதுகாக்க TRAI பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வரிசையில், மோசடி இணையதளங்கள் மூலம் மக்கள் பணத்தை இழக்கும் வாய்ப்பை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட இணையதள லிங்க் மட்டுமே SMSஆக வரும்.
▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 58 ▶ குறள்: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. ▶ பொருள்: நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் வாக்கி டாக்கி, பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 35 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8ஆவது சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. ஓபன் பிரிவில் ஈரான் அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணி 3.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. குகேஷ், அர்ஜூன், விதித் குஜ்ராத்தி வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா டிரா செய்தார். இதன் மூலம் 16 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. உஸ்பெகிஸ்தான் 14 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
▶ செப்.20 (புரட்டாசி 4) ▶ வெள்ளி ▶ நல்ல நேரம்: 9.15 – 10.15AM & 4.45 – 5.45 PM ▶ கெளரி நேரம்: 12.15 – 1.15AM & 6.30 – 7.30PM ▶ ராகு காலம்: 10.30AM – 12.00PM ▶ எமகண்டம்: 3.00 – 4.30PM ▶ குளிகை: 7.30 – 9.00AM ▶ திதி: த்ரிதியை ▶ பிறை: தேய்பிறை ▶நட்சத்திரம்: ரேவதி காலை 9.38 மணி வரை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ யோகம்: அமிர்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: பூரம்
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சுமார் 13,400 வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் சுமார் 1.7 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அருரா குமார திசநாயகே ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இன்று (செப். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவில் கார் வாங்குவோரில் சுமார் 67% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கார் வாங்குவோரில் 30% பெண்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 83% பேர் பெட்ரோல் கார்களையும், 12% பேர் டீசல் கார்களையும், 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விருப்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (செப். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.