India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘உத்யம்’ இணையதளம் சரிவர செயல்படாததால் தொழில்முனைவோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறு தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த மத்திய அரசு ‘உத்யம்’ சான்று வழங்குகிறது. இந்த பதிவு உள்ள நிறுவனங்களுக்கு கடன், சலுகை போன்றவற்றை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களாக இந்த இணையதளத்தில் பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக தொழில் முனைவோர் கூறுகின்றனர்.
உடல் எடை கூடியதால் உருவக்கேலியை எதிர்கொண்டதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் எப்போதும் உடல் எடை மெலிந்து இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றார். மகள் ஆராத்யா பிறந்த பிறகு உடல் எடை கூடி விட்டதாகவும், தனது தோற்றத்தை பார்த்து சிலர் உருவக்கேலி செய்ததாகவும் கூறினார். மேலும், தாயான பிறகு உடலில் மாற்றங்கள் வருவது இயற்கைதான் எனவும் தெரிவித்தார்.
திருச்சி அடுத்த மணப்பாறையில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் வழிபாடு செய்தால் குடும்ப பிரச்னை தீரும் என்பது ஐதீகம். கணவன், மனைவி பிரச்னை, உடன்பிறந்தவர்களுக்கு ஏற்படும் தொந்தரவு, மன ரீதியான பிரச்னைகளை ஏழு கருப்பண்ண சாமியிடம் முறையிட்டால் ஒரே வாரத்தில் சரியாகும் என்கிறார்கள் ஆன்மிகவாதிகள். பிரார்த்தனை நிறைவேறிய உடன் நல்லாண்டவருக்கு வேஷ்டி, துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் பைடனை நேரில் சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ஆம் தேதி ஜெலன்ஸ்கி அமெரிக்கா வரவுள்ளதாகவும், அதிபர் பைடன், துணை அதிபர் ஹாரிஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா – உக்ரைன் போரின் நிலை குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
*1857 – கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியை கைப்பற்றின. *1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார். *1933 – பெண்ணிய செயற்பாட்டாளர் அன்னி பெசன்ட் காலமானார். *1977 – ஐநாவில் வியட்நாம் இணைந்தது. *1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கி விண்ணில் பாய்ந்தது. *1971 – இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாள். *1984 – செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்த நாள்.
சு.வெங்கடேசனின் கதையில் விஜய்யை இயக்க இருந்ததாக சசிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எழுத்தாளர் சு.வெங்கடேசன் உடன் சேர்ந்து ஒரு சூப்பர் ஹீரோ ஸ்கிரிப்டை தயார் செய்ததாக கூறினார். ‘பாகுபலி’ படத்திற்கு முன்பே ₹100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருந்த அதன் கதை விஜய்க்கு பிடித்திருந்ததாகவும், தயாரிப்பாளர் கிடைக்காததால் அப்படத்தை எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
உலகளவில் அதிக சினிமா காதலர்களை கொண்ட நாடு எது தெரியுமா? அது நமது இந்தியாதான். உலகளவில் அதிகளவில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடும் இந்தியாதான். ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட மொழிகளில், சுமார் 2,000 திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகிறது. இந்நிலையில், தேசிய சினிமா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று மட்டும் முன்னணி திரையரங்குகளில் வெறும் ₹99க்கு டிக்கெட் கிடைக்கும்.
45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. போலந்து அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணி 1.5 – 2.5 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்ற நிலையில், வந்திகா அகர்வால் டிரா செய்தார். ஆனால், ஹரிகா, வைஷாலி தோல்வி அடைந்ததால், இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. எனினும் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு சரத்குமார் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்த சிறப்பான செயல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், போலி தகவல்களை நம்பாமல் மக்கள் சுயமாக சிந்தித்து தங்கள் கருத்துகளை கருத்துக் கேட்பின்போது பதிவு செய்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
*மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உடல் வலி. *மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள். *ஒரு நாட்டின் பாரம்பரியத்தை பறித்துவிடுங்கள், அவர்கள் இன்னும் எளிதாக சம்மதித்துவிடுவார்கள். *நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது. *எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம். *இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி.
Sorry, no posts matched your criteria.