India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், உள்ளாட்சி தேர்தலில் 20% இடங்களை தந்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம், இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஒருசேர வலியுறுத்தினர். திருமாவை போல் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், திமுக அமைச்சர்கள் காங்கிரசாரை கண்டுகொள்வதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
IAS, IPS பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 24 மையங்களில் இன்று முதல் செப். 29 வரை இத்தேர்வுகள் நடைபெற உள்ளது. 1,056 காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தேர்வு நடத்தி 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில், 650 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் இவர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். வெற்றி பெற வாழ்த்துகள்.
ஆந்திராவில் புதிய மதுபானக் கொள்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி அரசு வகுத்துள்ளது. அதன்படி, எந்த பிராண்ட் மதுபானமாக இருந்தாலும், 180 மில்லி (குவார்ட்டர் பாட்டில்) ரூ. 99-ஐ தாண்டாது. வரும் அக்.1-ம் தேதி முதல் இந்தக் கொள்கை அமலுக்கு வருகிறது. அதேபோல, இனி குலுக்கல் முறையில் மதுபானக் கடைகளின் உரிமங்கள் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் TCS நிறுவனத்திற்கு என்று ஒரு தனிப் பெயரும், மரியாதையும் உண்டு. பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளில் TCS ஈடுபட்டதில்லை என்பதும் இதற்கு காரணம். இந்நிலையில், Kantar Brandz வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே அதிக பண மதிப்புக் கொண்ட நிறுவனங்களின் (Most Valued Brand) பட்டியலில் 49 பில்லியன் டாலர்களுடன் TCS முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த இடத்தை TCS தக்க வைத்துள்ளது.
ISRO மனித விண்வெளி விமான மையத்தில் காலியாக உள்ள 99 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Medical Officer உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, MBBS, M.E, M.Tech, Any Degree. சம்பளம் வரம்பு: ₹21,700 – ₹2,08,700. வயது: 18-35. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக். 9. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவலுக்கு <
தமிழகத்தில் பிராய்லர் கோழிகளை போல பிராய்லர் ஆடுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து TN FACTCHECK, ஆடுகளில் பிராய்லர் என்ற வகையே கிடையாது என விளக்கமளித்துள்ளது. போயர் வகை ஆடுகள் South Africaவை சேர்ந்தவை என்றும், 6 மாதங்களில் 24KG எடை வரை வளரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கலப்பின விருத்தி அடிப்படையில் TNல் இவ்வகை ஆடுகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதாகக் கூறியுள்ளது.
➸சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கன் அணி, முதன்முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. ➸இருங்காட்டு கோட்டை கார் பந்தய ஓடுதளத்தில் புதிய சர்வதேச கார்ட்டிங் சர்க்யூட் அமைக்கப்பட்டது. ➸சீனா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் ஸ்காட்லாந்தின் கில்மோரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ➸ஈரானை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி செஸ் ஒலிம்பியாட்டில் 8ஆவது வெற்றியை உறுதி செய்தது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து இயக்குநர் மோகன்ஜி கருத்து தெரிவித்துள்ளார். “எப்படி மனசாட்சி துளியும் இல்லாமல் இத்தனை கோடி மக்களின் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க? வைணவ முத்திரை வாங்கிய எத்தனை பேர் புனிதமாக வாழ்கின்றனர்? இதை செய்த கொடூர மிருகங்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும். இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்” எனக் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ளது. +1, +2 மாணவர்களுக்கு செப்.19 (நேற்று) தொடங்கிய நிலையில், இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து, வருகிற 27ம் தேதியுடன் அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. பின்பு 28ம் தேதி முதல் அக். 2 வரை 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்.3ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. SHARE IT
➤லெபனான்: ஹிஸ்புல்லா அமைப்பினரின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ➤ஹாங்காங்: 6 புள்ளி ரிக்டரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு அஞ்சி மக்கள் வீதியில் தஞ்சம் புகுந்தனர். ➤ஏமன்: தைஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கில் வெடிமருந்துகள் திடீரென வெடித்துச் சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. ➤மியான்மர்: உள்நாட்டு போரால், 3 கோடி மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தகவல்.
Sorry, no posts matched your criteria.