India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
YSR காங்., ஆட்சியில் திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், ‘சட்டம் ஒழுங்கு, ஆந்திர வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திசை திருப்பவே லட்டு விவகாரத்தை கிளப்பிவிட்டுள்ளனர். அரசியலுக்காக கடவுளின் பெயரை சந்திரபாபு பயன்படுத்துவது கீழ்த்தரமானது’ என விமர்சித்துள்ளார்.
ஒடிசாவில் ராணுவ வீரரின் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அடித்து உதைத்த 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குண்டர்கள் துரத்தியதால் அடைக்கலம் தேடி அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார், ராணுவ வீரரை சிறையில் தள்ளி, அவரது காதலியை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியுள்ளனர். இது ராணுவத்திற்கு தெரியவரவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32, ஹசன் மிராஸ் 27* ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4, ஜடேஜா, ஆகாஷ் தீப், சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து, 227 ரன்கள் பின்தங்கியுள்ள BAN 2வது இன்னிங்சை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்டுவின் தரம் குறைந்தது குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்ததாக தேவஸ்தான நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அத்துடன், தரம் குறைவாக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் <<14148781>>AR Diary<<>> நிறுவனத்திற்கு தடை விதித்ததாகவும் தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் கூறியுள்ளார். மேலும், லட்டுவின் தரத்தை ஆய்வு செய்ய ஆந்திர CM சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜானிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவரது மனைவி ஆயிஷா குற்றஞ்சாட்டியிருந்தார். 16 வயதில் பாலியல் தொல்லை கொடுத்த போதே ஏன் அந்த பெண் புகாரளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், புகாரளித்த பெண் ஆதாரங்களை வெளியிடவும் கேட்டுக் கொண்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. வழக்கறிஞர்களான ஹரிஹரன், பொற்கொடி, சதீஷ்குமார், ஹரிதரன், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி உள்ளிட்ட 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில், ஏற்கெனவே, 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே நேரம் 2 நாள்களுக்கு வெப்பநிலை 2 முதல் 4° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.
இன்று 10 மணிக்கு <<14146112>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) டெமாஸெக் 2) புறா 3) கார்ல் லின்னேயஸ் 4) 294 படிக்கட்டுகள் 5) ராஃப்லேசியா அர்னால்டி 6) Deoxyribo Nucleic Acid 7) பாம்பு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
நாகப்பட்டினத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்யபிரகாஷ் என்பவர், மனநல ஆலோசனை என்ற பெயரில் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக் கொடுப்பதாக, குழந்தைகளிடம் அத்துமீறி வந்துள்ளார். கிருஷ்ணகிரியில் போலி NCC கேம்ப் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வடு மறைவதற்குள், மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐஃபோன் 16 இந்தியா உள்பட 60 நாடுகளில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும் இதன் சந்தை வரவை பலரும் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். காரணம் இதில் Apple Intelligence எதுவும் நிறுவப்படவில்லை. பயனர்கள் ஆப்பிள் AI-ஐ பெற தனி iOS புதுப்பிப்பைப் பதிவிறக்க வேண்டும். ஐஃபோன் 16 முந்தைய மாடல்களில் இருந்து மிதமான மேம்படுத்தல் மட்டுமே கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.