India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 33*, ரிஷப் பண்ட் 12* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்சில் இந்தியா 376, வங்கதேசம் 149 ரன்களும் எடுத்திருந்த நிலையில், இந்தியா 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 3 நாள்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் எந்த அணி வெற்றிபெறும் என நினைக்கிறீர்கள்?
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தா, பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டார். மேலும், ஒரு பெண் வழக்கறிஞருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கர்நாடகா உயர்நீதிமன்றம் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய SC கேட்டுக் கொண்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் 12,000 ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். முதல் இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணில் 12 ஆயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது பேட்டர் விராட் ஆவார். 1. சச்சின் (14,192) 2. பாண்டிங் (13,117), 3. ஜாக் காலிஸ்(12,305), 4. குமார் சங்கக்கார (12,043) முதல் 4 இடங்களில் உள்ளனர்.
திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றி கொழுப்பை கலந்து விற்ற ராஜசேகரே (AR Foods) பழனி முருகன் கோயிலுக்கும் நெய் சப்ளை செய்வதாக பாஜகவின் செல்வகுமார் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டுப் போயுள்ளது. இதுதொடர்பாக, பலமுறை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், மழுப்பலாக பதில் சொல்லி வருவது யாரை காப்பாற்ற? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோஹித் ஷர்மா டி20க்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள், 2ஆவது இன்னிங்ஸில் 5 ரன்கள் என சொற்ப ரன்களிலேயே அவர் ஆட்டமிழந்ததால் இவ்வாறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே, அவர் வேகமாக வெளியேறியதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கேட்டுக்கொண்டுள்ளார். அறிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் ஆய்வு செய்தபின், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் 1995இல் திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டது. நிறுவனத்தில் சீனிவாசலுநாயுடு ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இந்நிறுவனம் Raaj என்ற பெயரில் பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘Thalapathy 69’ படத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், சிம்ரன், சமந்தா, பூஜா ஹெக்டே, மோகன்லால், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கூறியுள்ளார். ‘லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்க்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர் விடப்பட்டு, நெய் கொண்டுவரப்படும் டேங்கர்கள் NABL சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பின், 3 விதமான சோதனை நடத்தப்படும். இப்படி இருக்கையில் நெய்யில் கலப்படம் என கூறுவது கட்டுக்கதை’ என கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 400 விக்கெட்டுகள் எடுத்த 10வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்த 3ஆவது விக்கெட்டின் மூலம் இந்த இலக்கை அவர் அடைந்துள்ளார். டெஸ்ட்டில் 162 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 149 போட்டிகளும், டி20யில் 89 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். பும்ராவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.