India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருநாள் திருப்பதி கோயிலுக்கு வந்த செல்வந்தர் ஒருவர், தனது வேண்டுதல் நிறைவேறினால், பெருமாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் லட்டு வழங்குவதாக வேண்டிக்கொண்டார். வேண்டுதல்கள் நிறைவேறவே, லட்டு தயாரிக்க, கல்யாணம் ஐயங்கார் என்பவரை வரவழைத்ததாக கூறப்படுகிறது. இப்படி பல பணக்காரர்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து லட்டுவை பிரசாதமாக வழங்கத் தொடங்கினர். இதுவே நாளடைவில் அதிகாரப்பூர்வ பிரசாதமானது.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் கேட்டு போராடிவந்த ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர். நாளை முதல் கொல்கத்தாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்க உள்ளதாக கூறிய அவர்கள், எனினும் மருத்துவ கல்லூரிகளில் தங்கள் போராட்டம் தொடரும் என்றனர். நியாயம் கிடைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்றும் கூறியுள்ளனர்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 17 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி LBW முறையில் அவுட் ஆனார். நடுவர் அவுட் கொடுத்ததும் Review கேட்காமல் கோலி நடையைக் கட்டினார். பின்னர் Ultraedge சோதனையில் அது நாட்அவுட் என தெரிய வரவே டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ரோஹித் ஷர்மா அதிர்ச்சியடைந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதேபோல், அவுட் கொடுத்த நடுவர் சிரிக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.
TNPSC குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்குள் மேலும் 75,000 இளைஞர்கள் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். கடந்த 3 முறை நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு மூலம் மொத்தம் 31,772 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6,244 என அறிவித்திருந்த காலிப் பணியிடங்கள் 6,724ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அஸ்வின், ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்களின் அருமை, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பே இந்திய அணிக்கு தெரிய வரும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். டாப் ஆர்டர் சரியும் போதெல்லாம், இந்த ஆல் ரவுண்டர்கள் ரன்களை குவித்து அணியை காப்பாற்றியதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், சில நேரங்களில், அவர்கள் நம் அருகில் இல்லாத போதுதான், மக்கள் அவர்களுடைய மதிப்பை உணர்வார்கள் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
குட்கா விற்பனை செய்த 20,000 கடைகளுக்கு சீல் வைத்து, 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்துள்ளது. கடைகளில் குட்கா பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. இதனையடுத்து, கூல் லிப் உள்ளிட்ட போதைப்பொருள்களை நாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து அறிக்கை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை இளம் வீரர் ஜெய்ஸ்வால் தகர்த்துள்ளார். BAN-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 56 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 10 ரன்களும் அடித்தார். இதன் மூலம், அறிமுகமான முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கவாஸ்கரின் (978) சாதனையை ஜெய்ஸ்வால் (1094) தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் சர்வதேச அளவில் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளார்.
திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு நிறைவுபெற்றுள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பப்பட்டது. கடந்த ஜூன், ஜூலையில் இந்நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வில்லனாக நடிக்க உள்ளதாகவும், ஸ்பெயினில் நடக்க உள்ள படப்பிடிப்பில் அர்ஜுன் தாஸ் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்தது. 2025 பொங்கலை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது.
<<14150417>>பழனி <<>>பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்களை பக்தர்கள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய A.R. Dairy Food நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.