India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா முழுவதும் உள்ள மத இடங்களின் புனிதத்தை காக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருப்பதியில் கோயில் பிரசாதம் மாசுபடுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் கவலையளிப்பதாக கூறிய அவர், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய கடவுள் பாலாஜி. இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என்பதால், இவ்விவகாரத்தை முழுமையாக கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளான இன்று இரு அணியிலும் சேர்த்து மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. வங்கதேசம் 10 விக்கெட், இந்தியா 7 (முதல் இன்னிங்ஸ் 4, 2வது இன்னிங்ஸ் 3) விக்கெட்டுகளை இழந்தது. இதுவே சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு நாளில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகளின் எண்ணிக்கை ஆகும்.
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா (80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மலையாளத்தில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் கமல் நடித்த ‘சத்யா’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு கேரள CM பினராயி விஜயன் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வருங்காலங்களில் பூமி வாழ தகுதியில்லாத இடமாகக் மாறக்கூடும் என இஸ்ரோ தலைவர் எச்சரித்துள்ளார். அதன் காரணமாகவே புதன், வெள்ளி கோள்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மனித சமூகம் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளி கோள் பூமிக்கு அருகில் இருந்தாலும், அங்கு செல்வது மிகவும் சவாலானது எனவும், பூமியை விட 100 மடங்கு அழுத்தம் அங்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏன் அச்சத்தை பரப்பி, தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் என பவன் கல்யாணுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் போதுமான வகுப்புவாத பதற்றங்கள் உள்ளன எனவும், அதற்காக மத்தியில் ஆட்சியில் உங்கள் நண்பர்களுக்கு நன்றி எனவும் பவனை அவர் கலாய்த்துள்ளார். கோயில் பிரச்னைகளை ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைக்க பவன் வலியுறுத்தியிருந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் பும்ரா, ஜடேஜா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினர். இந்நிலையில் அவரை வங்கதேச வீரர் தமீம் இக்பால் புகழ்ந்து பேசியுள்ளார். அவர், பும்ராவுக்கு திறமைகள் மட்டுமின்றி அபாரமான மூளையும் இருக்கிறது. உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கலாம், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியாவிட்டால் பும்ராவை போல் நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள் என்றார்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளதா அல்லது நீக்கப்பட்டதா என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். KYC தகவல்களைப் புதுப்பிக்காத பல கார்டுகள் செயலிழக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் கார்டின் நிலையை TNPDS இணையதளத்தில் சரிபார்த்து உறுதி செய்யவும். ஏழை மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும் வகையில் 6 மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்களை நீக்க வாய்ப்புள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை, நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி முர்மு நியமித்துள்ளார். கொலிஜீயத்தின் பரிந்துரையை ஏற்று விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதியாக்கப்பட்டுள்ளனர். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிம் அகமது சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள “வேட்டையன்” படத்தின் டீசர் நெகடிவ் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. டீசரில் வரும் பெரும்பாலான காட்சிகள் அண்ணாத்த படத்தில் வரும் காட்சிகளை, காப்பி அடித்ததுபோல் இருப்பதாகவும், பாடல்கள் மற்றும் இசையும் ஜெயிலர் படத்தில் வருவதை போலவே இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர். இந்த டீசர் எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, அரசியல் குறித்து கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி கோபமாக பதிலளித்தார். இது குறித்து பேசியுள்ள உதயநிதி, ‘பதவி குறித்து ரோட்டில் போவோர், வருவோரிடம் எல்லாம் கேட்கிறார்கள். முதல்வர்தான் இது குறித்து முடிவெடுப்பார். நான் இப்படி சொல்வதால் ரஜினிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள். ரஜினியிடம் இதுபோன்ற கேள்விகளை தவிர்க்கலாம்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.