news

News September 21, 2024

Chess Olympiad: போட்டியை சமன் செய்த இந்தியா

image

45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவின் 9ஆவது சுற்றில் இந்திய அணி டிரா செய்தது. உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி களம் இறங்கிய நிலையில், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன், விதித் ஆகிய அனைவருமே போட்டியை சமன் செய்தனர். எனினும், புள்ளி பட்டியலில் 17 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் தொடர்கிறது. அமெரிக்கா 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

News September 21, 2024

ஹிஸ்புல்லா கமாண்டரை கொன்றது இஸ்ரேல்

image

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் இப்ராகிம் கில் கொல்லப்பட்டார். பேஜர் கருவிகள் வெடித்த சம்பவத்தில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 37 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் எனக் கூறி, ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. 1983இல் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு காரணமானவர் இப்ராகிம் கில்.

News September 21, 2024

அன்பை பரப்பி அமைதியை நிலைநாட்டுவோம்!

image

போர்கள், உள்நாட்டு பிரச்னை, மோதல்கள், பயங்கரவாதம் என உலக மக்கள் எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருக்கின்றனர். அவற்றை நீக்கி மனித சமூகம் அமைதியான முறையில் வாழ, செப். 21ஆம் தேதி உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் அமைதியை நிலைநாட்ட ஐநா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நாளில், உலகம் முழுவதும் வெறுப்பு மறைந்து, அன்பு பரவி அமைதி நிலவிட உறுதியேற்போம்.

News September 21, 2024

இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

image

இலங்கையில் 9ஆவது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அநுர குமார திசாநாயக்க ஆகிய மூவரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 13,421 வாக்குச்சாவடிகளில் சுமார் 1.71 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.

News September 21, 2024

இந்த மாதிரி படங்கள் வருவது சினிமாவுக்கு நல்லது: அனிருத்

image

வேட்டையன் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், நான் இதுவரை இந்த மாதிரி படம் பண்ணதே இல்லை. ரொம்பவே வித்தியாசமான படம் இருக்கும் என்ற அவர் தலைவர் இந்த மாதிரி படம் பண்ணது சினிமாவுக்கு ரொம்ப நல்லது என்றார். மேலும் இந்தப் படத்தோட கதை நன்றாக இருக்கும். ‘ஜெய் பீம்’ படத்தோட மிகப்பெரிய ரசிகன் என்றார்.

News September 21, 2024

வில்லியம் ஷேக்ஸ்பியரின் பொன்மொழிகள்

image

*அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். *நரகம் வெறுமையாக உள்ளது, எல்லாப் பேய்களும் இங்கே உள்ளன. *எதுவுமே செய்யாமல் எதுவும் வருவதில்லை. *காதல் கண்களால் பார்ப்பதில்லை, ஆன்மாவால் பார்க்கின்றது. *உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள். *பெண்கள் இரண்டு மொழிகளைப் பேசுகிறார்கள் அவற்றில் ஒன்று வாய்மொழி. *பல மனிதர்களுக்கு அறிவை விட தலைமுடி அதிகமாக உள்ளது.

News September 21, 2024

2ஆவது இடத்திற்கு சரிக்கிய இந்திய அணி

image

45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 9ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி டிரா செய்தது. USAக்கு எதிராக இந்திய அணி களம் இறங்கிய நிலையில், அந்திகா அகர்வால் வெற்றி பெற்றி ஒரு புள்ளிகளை பெற்றார். திவ்யா தேஷ்முக், தானியா இருவரும் டிரா செய்தனர். வைஷாலி தோல்வியை தழுவினார். இதன் மூலம் 2 – 2 என்ற புள்ளி கணக்கில் போட்டி டிரா ஆனது. இதனால் முதலிடத்தில் இருந்த இந்தியா, 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

News September 21, 2024

போலீஸுக்கே விபூதி அடிக்கப்பார்த்த இளைஞர்

image

பிஹார் மாநிலம் ஜமுய் பகுதியில் போலி ஐபிஎஸ் அதிகாரி முத்லேஷ் மாஜி (18) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 லட்சம் கொடுத்து சீருடையும், துப்பாக்கியும் வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஐபிஎஸ் வேலை கிடைத்ததாக அவரது அம்மாவிடம் தெரிவிக்க சென்றபோது அவர் பிடிபட்டார். மேலும், கைது செய்யும்போது, “நான் ஒரு ஐபிஎஸ்” என போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

News September 21, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 59 ▶ குறள்: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. ▶ பொருள்: புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

News September 21, 2024

ஊழியர்களை எச்சரித்த சாம்சங்

image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 12 நாள்களாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இருக்காது எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!