India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “ஒருபடம் தோல்வி அடைந்து விட்டால், அடுத்த படம் ஹிட் கொடுக்கும் வரை தூக்கம் இருக்காது. சகுனிகள் அதிகம் வாழும் சமூகம் இது. இங்கு நாம் நியாயவாதியாக மட்டும் இருந்தால் போதாது. சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே இருந்தால்தான் இங்கு நாம் பிழைக்க முடியும்” எனக் கூறினார்.
உக்ரைன் போரில் ரஷ்யத் தரப்பில் இதுவரை 70,112 பேர் பலியாகி உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசு வெளியிட்ட அறிவிப்புகள், பிற செய்திகளை மேற்கோள்காட்டி பலி எண்ணிக்கையை உறுதி செய்திருப்பதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த மீடியாஜோனா, மெடுசா ஆகியவை 1.20 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் உக்ரைன் தரப்பு பலி குறித்து அவை தகவல் வெளியிடவில்லை.
மாதங்களில் சிறப்பு வாய்ந்தது புரட்டாசி என்றும், அது பெருமாளுக்குரிய மாதம் என்றும் ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மாத சனிக்கிழமை (இன்று) விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், அனைத்து கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்று கூறப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது என்றும், நமக்கான புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது என்றும் சொல்லப்படுகிறது.
மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர், முறையாக கையாளத் தவறுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் கொண்டுவர டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கான சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார். போதிய கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை மூட அவர் வற்புறுத்தியுள்ளார்.
2013ல் ராஜா ராணி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ குமார். முதல் படமே திரைப்பட ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த நிலையில் அடுத்து வெளிவந்த “தெறி”, “மெர்சல்”, “பிகில்” அட்லீக்கு மேலும் பெயரை பெற்று தந்தது. இதன்பிறகு, 2023இல் ஷாருக் கான் நடிப்பில் வெளியான “ஜவான்” ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் நாயகர்களின் விருப்பத்திற்குரிய டைரக்டரான அட்லீக்கு இன்று 38வது பிறந்தநாள் ஆகும்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இரவு முதல் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பிறகு விட்டு விட்டு இடி மின்னலுடன் மழை பெய்ததால், அதிகாலை வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி இன்று பதவியேற்கவுள்ளார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. இதன் மூலம் டெல்லியின் இளம் முதல்வர் என்ற பெருமையை அதிஷி பெறவுள்ளார். முன்னதாக, நிதி, நீர், கல்வி உள்ளிட்ட பல முக்கிய இலாகாக்கள் அவர் வசம் இருந்தது. மதுபான முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பெயரை RMC முன்னறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 7 மணி வரை இடி-மின்னலுடன் மழை பெய்யும் என்று RMC கூறியுள்ளது. அதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தி. மலை, மயிலாடுதுறை, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் RMC குறிப்பிட்டுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தை ரஜினி பாராட்டாததால் வருத்தப்பட்டதாக ஞானவேல் தெரிவித்துள்ளார். ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் விழாவில் பேசிய அவர், அப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி அழைத்தால் போட்டுச் செல்ல புதிய சட்டை எடுத்து வைத்திருந்ததாக கூறினார். ஆனால், அப்பாவுக்கு படம் பிடித்திருந்ததாக செளந்தர்யா மெசேஜ் செய்ததாக தெரிவித்தார். மேலும், இந்த மேடையில் நிற்க காரணமான சூர்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார்.
*1776 – நியூயார்க் நகரின் ஒரு பகுதி பிரிட்டானிய படையால் கைப்பற்றப்பட்டதை அடுத்து தீக்கிரையானது. *இந்தியாவில் முகலாய ஆட்சி முடிவு. 1860 – ஆங்கிலேய பிரஞ்சுப் படைகள் சீனப் படைகளை தோற்கடித்தன. *1965 – காம்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. *1980 – நடிகை கரீனா கபூர் பிறந்தார். *1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து அர்மீனியா விடுதலை பெற்றது. *1999 – தாய்வான் நிலநடுக்கத்தில் 2,400 பேர் பலி.
Sorry, no posts matched your criteria.