news

News September 21, 2024

சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

image

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவிப்பவரா நீங்கள்? உங்களுக்கான மூலிகை தேநீர் இதோ… துளசி, பட்டை, ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஜாதிக்காய், சித்தரத்தை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, இறக்கி தேன் கலந்து குடியுங்கள். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

News September 21, 2024

அதிமுக EX அமைச்சர் மீது வழக்கு

image

2011-16-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக Sriram Properties நிறுவனத்திற்கு திட்ட அனுமதி வழங்க, ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மீது புகார் எழுந்துள்ளது. இதன்பேரில் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வைத்திலிங்கம் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்.

News September 21, 2024

வாழ்க்கையில் ரொம்ப ஆடக்கூடாது: ரஜினி

image

‘வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழாவில் பல அறிவுரைகளை கூறினார் ரஜினி. அவர் பேசியதாவது: கீழே விழுந்தால் உடனே எழுந்து மேலே வர வேண்டும். யார் நம்மை மிதிக்க நினைக்கிறார்களோ, அவர்களை மிதித்து நாம் முன்னேற வேண்டும். காலம் ரொம்ப பொல்லாதது. ஒரே நேரத்தில் நம்மை உச்சத்துக்கு கொண்டு செல்லும். பிறகு எதிர்பார்க்காத போது, நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். அதனால் ரொம்ப ஆடக்கூடாது” எனக் கூறினார்.

News September 21, 2024

துணை CMஆகும் உதயநிதி: இந்தத் தேதியில் அறிவிப்பு?

image

வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாகவே உதயநிதி விரைவில் துணை முதல்வராவார் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதை மூத்த அமைச்சர்கள் சிலரும் உறுதி செய்தனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் 28ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

News September 21, 2024

அவருடன் என்னை சேர்த்து பேசாதீர்கள்: ஜெயம் ரவி

image

தனது மனைவி ஆர்த்தியை பிரியப் போவதாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார். இதனிடையே, பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதால்தான் மனைவியை அவர் பிரிவதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஜெயம் ரவி, “பாடகி கெனிஷாவுடன் என்னை இணைத்து பேசாதீர்கள். அது தவறு. அவருடன் இணைந்து ஆன்மீக மையம் ஒன்றை தொடங்க இருந்தேன். அதை தடுப்பதற்காக சிலர் இப்படி பேசுகிறார்கள்” எனக் கூறினார்.

News September 21, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் மீது 140 ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. ➤மியான்மர் யாகி புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்தது. ➤ஈரானில் சிறையில் உள்ள 2,887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கினார். ➤உக்ரைன் போரில் இதுவரை 70,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக BBC கூறியுள்ளது.

News September 21, 2024

பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் தமிழக அரசு

image

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை சத்யவாணி முத்து அம்மையார் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெண்கள் பெறலாம். கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 20-40 ஆகும். தையல் தெரிந்திருப்பதோடு, ஆண்டு வருமானம் ₹72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். SHARE IT

News September 21, 2024

விளையாட்டு துளிகள்

image

➤தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்க தவறிய இந்திய கபடி கூட்டமைப்பை, சர்வதேச கபடி ‘சஸ்பெண்ட்’ செய்தது. ➤ENG அணிக்கு எதிரான முதலாவது ODI போட்டியில் AUS அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ➤செஸ் ஒலிம்பியாட்: 9ஆவது சுற்றில் அமெரிக்காவுடனான போட்டியை இந்திய பெண்கள் அணி ‘டிரா’ செய்தது. ➤சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் மாள்விகாவை ஜப்பானின் யமகுசி 2-0-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

News September 21, 2024

BREAKING: இலங்கையில் வாக்குப்பதிவு தொடங்கியது

image

இலங்கை அதிபர் பதவித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 – மாலை 4 மணி வரை இத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் மொத்தம் 1.7 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர்கள் சஜித் பிரேமதேசா, திசநாயகே ஆகியோர் முக்கியமானவர்கள்.

News September 21, 2024

காங்கிரசுக்கு பேய் பிடித்துள்ளது: மோடி

image

காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு பேய் பிடித்திருப்பதாக PM மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரசிடம் இருந்த தேசப்பற்று என்ற உயிர் மரணித்து விட்டதாகவும், அக்கட்சியை பேய் பிடித்து உள்ளதாகவும் சாடினார். சோனியா காந்தி குடும்பமே மிகவும் ஊழல்மிக்க ராஜ குடும்பம், வெளிநாடு சென்று இந்திய எதிர்ப்பை செயல்படுத்துகிறது என்றும் விமர்சித்தார்.

error: Content is protected !!