India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்குள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்களை நேற்றிரவு திடீரென சூழ்ந்த தீவிரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 6 ராணுவத்தினர் உயிரிழந்தனர். 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
BAN எதிரான முதல் டெஸ்டில் சுப்மன் கில்-ஐ தொடர்ந்து ரிஷப் பண்ட் அரை சதமடித்தார். 3ஆவது நாளான இன்று காலை முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தற்போது சுப்மன் கில் 64*, ரிஷப் பண்ட் 50* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். IND அணி 44 ஓவரில் 150/3 ரன்கள் எடுத்துள்ளது. BAN அணியை விட 377 ரன்கள் IND முன்னிலை பெற்றுள்ளது. இருவரும் சிறப்பாக விளையாடுவதால், BAN அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு நடிகர் சிவாஜி சார் இருந்தால் அவர்தான் நடித்திருப்பார். அவருக்கு பதிலாக அமிதாப் நடித்துள்ளார். காரணம் அந்தளவுக்கு அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்” எனக் கூறினார். இதன் மூலம் கல்கி 2898 ஏடி போலவே இப்படத்திலும் அமிதாபுக்கு வெயிட்டான ரோல் என்பது தெரிய வருகிறது.
SA அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த AFG வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். ODI போட்டிகளில் 23 வயதிற்குள் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் கோலி 3ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை குர்பாஸ் சமன் செய்துள்ளார். சச்சின் 8 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். குயிண்டன் டி காக் 8, பாபர் அசாம் 6, தரங்கா 6 சதங்களை எடுத்துள்ளனர்.
ரயில்வேயில் Undergraduate பதவிகளில் காலியாக இருக்கும் 3,445 இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. RRB அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அக்டோபர் 10ம் தேதிவரை இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் பதவிகளில் பணியமர்த்தப்படுவர். வேலை தொடர்பான தகவல், விண்ணப்பிக்கும் போது பதிவாகும் மொபைல் எண், இ-மெயிலுக்கு பகிரப்படும். SHARE IT
இளைஞரை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் 2 மகன்களான சாஹீர், ரபீக்கிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2 பேரும் 30 நாள்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. வளசரவாக்கத்தில் உள்ள தங்கள் வீட்டை பார்த்தபடி சென்ற இளைஞரை தாக்கியதாக 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து வளசரவாக்கம் போலீஸ் தேடி வந்தது.
இட்லி மாவுடன் (1 கப் அளவு) ஊற வைத்து கரகரப்பாக அரைத்த நாட்டு சோள மாவை (2 கப்) சேர்த்து புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், மல்லி, உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். இந்த மசாலாவை பணியார மாவில் கலந்து சூடான குழிப்பணியாரக் கல்லில் ஊற்றி, பொன்னிறமாக மாறும்வரை வேக வைத்து எடுத்தால் சுவையான சோளப் பணியாரம் ரெடி. இதை சட்னியுடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
சர்ச்சையில் சிக்கியுள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாநில அரசு அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று மத்திய அரசு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். திருப்பதி கோயிலில் லட்டுத் தயாரிக்க அனுப்பிய நெய்யில் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகாரால் அந்நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சனி (இன்று), ஞாயிறு விடுமுறையையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் 2ஆவது நாளாக இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு 520 பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து தி.மலை. நாகை, ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்கு 130, மாதவரத்தில் இருந்து 40, திருப்பூர், கோவை, ஈரோட்டில் இருந்து 200 பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
BAN எதிரான முதல் டெஸ்டில் கில் அரை சதமடித்தார். 3ஆவது நாளான இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒரே ஓவரில் 2 சிக்சர் அடித்து 50 ரன்களை கடந்தார். தற்போது சுப்மன் கில் 56*, ரிஷப் பண்ட் 26* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 31 ஓவரில் 113/3 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணியை விட 343 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.