India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆஸி.,க்கு எதிரான முதல் ODI போட்டியில் சொதப்பிய ரோஹித், 2-வது (73 ரன்கள்), கடைசி (121 ரன்கள்) போட்டிகளில் ரன்களை குவித்தார். தனது ரன்களை வைத்தே ரசிகர்கள் தன்னை மதிப்பிடுவார்கள் என்பதை ரோஹித் புரிந்து வைத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 20 பந்துகளில் 40 ரன்கள் என்ற அதிரடி விளையாட்டை ரோஹித் விளையாட விரும்பவில்லை என்ற அவர், களத்தில் நீண்ட நேரம் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ₹100 கொடுத்தால் போதும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள் என மூதாட்டி ஒருவரை கேலி செய்யும் வகையில், பகிரப்பட்ட Meme-ஐ கங்கனா ரனாவத் Retweet செய்திருந்தார். இதற்கு எதிராக மூதாட்டியின் கணவர் பஞ்சாப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜரான கங்கனா தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்.

சுயேச்சை MLA நேரு, ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 2021 தேர்தலில் உருளையன்பேட்டையில் வென்ற அவர், ஆளும் NR காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனிடையே, CM ரங்கசாமி, பாஜகவுடன் சேர்ந்து தனது தனித்தன்மையை இழந்ததால் புதிய கட்சி தொடங்க வேண்டிய நிலை உருவானதாக நேரு கூறினார். கட்சி தொடக்க விழாவில் பெரியார் படம் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 2025 மாதத்தின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யவும்.

சிம்புவின் ’அரசன்’ படத்தின் ஷூட்டிங்கை ஜனவரி முதல் வாரத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழ் புத்தாண்டுக்கு தான் சூர்யாவின் கருப்பு படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், சூர்யாவின் கருப்பு ரிலீஸில் மீண்டும் மாற்றம் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021-ல் 12.5 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததாலேயே இதனை முன்பே கண்டறிய நாம் தவறுகிறோம். மார்பக புற்றுநோய் குறித்த தவறான புரிதல்களும் அதன் உண்மைகளையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. உயிர் காக்கும் தகவலை SHARE பண்ணுங்க.

தொடர்ந்து தனது யூஸர்களை தக்கவைத்துக் கொள்ள, Whatsapp புது புது அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அப்படிதான் தற்போது, X & பேஸ்புக்கில் Cover photo வைப்பது போல, Whatsapp-லும் Cover photo வைக்கும் வசதி அறிமுகமாகவுள்ளது. முதற்கட்டமாக, Beta வெர்ஷனில் பிசினஸ் அக்கவுண்டகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. விரைவில் இந்த வசதி, விரைவில் அனைத்து யூஸர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேமரூனில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில், பால் பியா 53.66% வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19% வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா, உலகின் மிகவும் வயதான அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இருந்து (41 ஆண்டுகளாக) பால் பியாதான் அதிபராக உள்ளார்.

மக்கள் பிரச்னையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்று விஜய்யை, கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யை விட பெரிய கூட்டத்தை கையாண்டவர் விஜயகாந்த் என குறிப்பிட்ட கருணாஸ், சும்மா ஏதோ சப்ப கட்டு கட்டக்கூடாது என்று காட்டமாக பேசினார். கரூர் துயரை அடுத்து விஜய்யின் செயல்பாடுகள் மீதே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.