India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். 2ஆவது இன்னிங்சில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய அவர், 124 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்கள் குவித்தார். இது அவரது 6ஆவது சதமாகும். பிறகு 109 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கொரோனா பெயரில் ஒரு மோசடி வேகமாக பரவி பலரது பணத்தை கொள்ளையடித்து வருகிறது. நம் போனுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா ஊசி எடுத்துள்ளீர்களா என கம்ப்யூட்டர் வாய்ஸ் கேட்கும். எடுத்தால் 1-ஐ அழுத்தவும், இல்லையெனில் 2-ஐ அழுத்தவும் என சொல்லும். இதில் எந்த நம்பரை நாம் அழுத்தினாலும் நமது வங்கி விவரங்கள் திருடப்பட்டு, பணம் திருடப்படும். எனவே இப்படி எந்த அழைப்பு வந்தாலும் துண்டித்து விடுங்கள். Share It.
வருமான வரி தாக்கல் செய்வோர், வருமான வரித்துறை இடையேயான பிரச்னைக்கு தீர்வு கண்டு செட்டில்மெண்ட் காணும் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் செட்டில்மெண்ட் காண்பதற்கு வருகிற அக். 1 முதல் மீண்டும் வசதி செய்து தரப்படவுள்ளது. இதற்கான பக்கம் அக்.1 முதல் திறக்கப்படவுள்ளது. ஆனால் எப்போது இது மூடப்படும் எனத் தகவல் இல்லை. இந்தத் தகவலை வருமான வரி செலுத்தும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்க.
BAN எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 205/3 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது சுப்மன் கில் 86*, ரிஷப் பண்ட் 82* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போது BAN அணியை விட 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வங்கதேச அணி வெற்றிபெற இந்திய அணி கடினமான இலக்கை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதையை நிலையில், இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
உலகின் மிகவும் விலையுயர்ந்த மிரட்டலான 2024 டாப்-5 சொகுசு கார்களின் பட்டியலை FORBES வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ:- ➤ரோல்ஸ் ராய்ஸ் La Rose Noire Droptail – ₹267.1 கோடி (4 Units) ➤ ரோல்ஸ் ராய்ஸ் Boat Tail – ₹233.7 கோடி (3 Units) ➤புகாட்டி La Voiture Noire – ₹156.2 கோடி (1 Unit) 4) ➤பகானி Zonda HP Barchetta – ₹146.7 கோடி (3 Units) ➤SP ஆட்டோமோட்டிவ் கேயாஸ் – ₹120.2 கோடி (100 Units).
பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு இயற்ற உள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது பிஹார், கேரளா, ஒடிஷாவில் மட்டுமே இச்சலுகை அமலில் உள்ளது. கேரளாவில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.
சென்னையை அடுத்த பொன்னேரி அருகே ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்கான இணைப்பு கருவியில் இருக்கும் போல்டுகள் அகற்றப்பட்டு கிடந்தன. இது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புலிக்குளம் அருகே 17ம் தேதி கிளிப்புகள் அகற்றப்பட்டு கிடந்தன. இதையடுத்து 2வது சம்பவம் நடந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ம.நீ.ம. கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வாய்மொழியாக கமல் பெயர் கொண்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக ஸ்ரீரங்கம் உள்பட 108 திவ்யதேசங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று காலை முதலே பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.