India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவில் கலப்படம் என்பது இன்றைக்கு மிகவும் சஜகமாகி விட்டது. நூடுல்ஸ், சிப்ஸ், சாக்லேட், இறைச்சி, பழங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் அதில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. இந்நிலையில், கலப்பட உணவுகளால் ஆண்டுதோறும் 4.20 லட்சம் பேர் உயிரிழப்பதாக WHO இயக்குநர் டெட்ராஸ் எச்சரித்துள்ளார். இவர்களில் 70 சதவீதம் பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதுதான் வேதனையான விஷயம்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை, ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதமடித்த அவர், இதுவரை 6 சதம் அடித்து முதலிடத்தில் இருந்த தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். பண்ட் 58 இன்னிங்ஸிலும், தோனி 144 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். 3ஆவது இடத்தில் விருத்திமான் சாஹா 3 சதங்களுடன் உள்ளார்.
மநீம நிர்வாகிகள் பதவிகளுக்கு ஆசைப்பட வேண்டுமென அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். மநீம பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவிலேயே நேர்மையானவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தான், அவர்கள்தான் அதிக வரி கட்டுகிறார்கள் என்று தெரிவித்தார். தோல்வி என்பது நிரந்தமானது அல்ல, அதுபோல பிரதமர் பதவியும் நிரந்தரம் அல்ல, ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் நடத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். இந்தியா 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் வல்லரசு நாடாக மாறும்” என்றார்.
சென்னை டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு இந்திய அணி 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 2ஆவது இன்னிங்சை தொடர்ந்து இன்று விளையாடிய இந்திய அணி, 287 ரன்கள் எடுத்து இருந்தபோது டிக்ளேர் செய்தது. போட்டி நிறைவடைய இன்னும் இரண்டரை நாள்கள் உள்ளதால், களத்தில் நின்று விளையாடினால் வங்கதேசத்தால் வெற்றி பெற முடியும். அதேபோல், சிறப்பாக பந்துவீசினால் இந்தியாவுக்கு வெற்றி வசமாகும்.
திருப்பதி லட்டுகளில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து பல அரசியல்வாதிகள் பலவிதமாக கருத்து தெரிவிக்கின்றனர். அந்த வகையில், சீமான் இதுபற்றி கூறுகையில், “இப்போ என்னாச்சு.. திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்துருக்காங்களா? அதை சாப்பிட்டவர்கள் உயிரோடு தானே இருக்கிறார்கள். இனி இதுபோல் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாட்டில் மக்களுக்கு எத்தனையோ பிரச்னை இருக்கு” எனக் கூறினார்.
3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. இதுகுறித்து RMC வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 27ம் தேதி வரை 7 நாள்களுக்கு லேசானது மற்றும் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் <<14157010>>ஷுப்மன் கில்<<>> சதம் அடித்து அசத்தியுள்ளார். 2ஆவது இன்னிங்சில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அவர், 161 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்கள் குவித்தார். இது அவரது 5ஆவது சதமாகும். முன்னதாக பிறகு ரிஷப் பண்ட் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி (252/4) தற்போது 479 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
2023-24ம் நிதியாண்டில் UPI பரிவர்த்தனை ₹200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017-18இல் அது ₹1 லட்சம் கோடியாக இருந்ததென்றும், அது 138% வளர்ச்சி அடைந்துள்ளதென்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் – ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ₹1,669 கோடி மதிப்புக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இது 8,659 கோடி எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். “அயோத்தி கோயில் திறப்பு விழாவில் 300 கிலோ திருப்பதி லட்டை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தோம். வைணவர்கள் தங்கள் உணவில் பூண்டு, வெங்காயம் கூட சேர்க்க மாட்டார்கள். அப்படியிருக்க, விலங்குகளின் கொழுப்பை அதில் கலந்து விட்டார்களே..” என வேதனை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.