India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போலீஸ் பாதுகாப்பு கேட்டு விஜயகாந்த் குடும்பத்தினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதில், சில தினங்களாக நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்று கூச்சலிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை, கடந்த மாதம் தமிழக அரசு திரும்பப்பெற்றது. கோரிக்கை மனுவை போலீசார் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
இலங்கையின் 9வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. மொத்தம் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், சுமார் 1கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. நாளை பிற்பகலில் புதிய அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3ஆவது நாள் ஆட்ட நேர இறுதியில் வங்கதேசம் 158/4 ரன்கள் எடுத்துள்ளது. 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், BAN வெற்றிபெற 357 ரன்கள் தேவைப்படுகிறது. IND முதல் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் முறையே 376 & 287/4d ரன்கள் எடுத்தது. BAN அணி முதல் இன்னிங்க்ஸில் 149 ரன்களில் ஆட்டமிழந்தது. மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி இன்று முன்னதாகவே முடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. தற்போது ஈரோடு, திருப்பத்தூர், புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்துள்ளது.
மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் பின்பற்றி வருகிறது. அந்தவகையில், ₹30,400 கோடி மதிப்பிலான மதுபானங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் நடைமுறையை தொடங்கியுள்ளது. குடோன்களில் இருக்கும் மதுபாட்டில்கள் சேதமடையும் பட்சத்தில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. ₹742 கோடி இன்சூரன்ஸ் எடுப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தற்போது டெண்டர் கோரியுள்ளது.
விமானப்படையின் தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் (59) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது விமானப்படையின் துணைத் தலைவராக உள்ளார். விமானப்படை தளபதியாக தற்போது இருக்கும் ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி, செப்.30இல் பதவி விலகும் நிலையில், அரசு புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்கை அறிவித்துள்ளது. இவர் 1984 முதல் கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
விக்கிரவாண்டியில் அக்.27ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும் தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்த புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு, தொகுதி வாரியாக 5 பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். மேலும், தவெக மாநாட்டிற்கு மொத்தம் 176 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூரியக் குடும்பத்தின் மிக தொலைவில் உள்ள நெப்டியூன் கோளை இன்று இரவு இந்தியர்கள் பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைவது போல, இந்த கோள் கிழக்கில் இருந்து உதயமாகும் இந்த அபூர்வ நிகழ்வை டெலஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியுமாம். அப்போது அது மிகத் தெளிவாகத் தெரியும் என விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வளி மண்டலத்தில் இருக்கும் மீத்தேன் வாயு காரணமாக வானில் நீல நிறத்தில் நெப்டியூன் பிரகாசிக்குமாம்.
தமிழ் மக்கள் தன்னை கைவிடவில்லை என ‘வேட்டையன்’ பட இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கண்கலங்கி பேசியுள்ளார். நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் கன்னட மொழி மட்டுமே தெரிந்த நிலையில், சென்னைக்கு ரயில் ஏறியதாகவும், தமிழ் தெரியாத தன்னுடைய நம்பிக்கையை தமிழ் மக்கள் பொய்யாக்கவில்லை என்றும் அவர் மனம் உருகி கூறியுள்ளார். மேலும், அதற்காக தமிழ் ரசிகர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்து கொண்டார்.
தவெக தலைவர் விஜய், கட்சியின் X பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளார். முன்னதாக விஜய்யின் படம் இருந்த நிலையில், தற்போது கட்சிக்கொடி மற்றும் தமிழ்நாடு வரைபடம் பின்னணியில் விஜய் கையெடுத்து கும்பிடுவது போன்ற படத்தை மாற்றியுள்ளார். முன்னதாக வைத்திருந்த விஜய் படத்தில் நெற்றியில் குங்குமம் இருந்த நிலையில், தற்போது குங்குமம் இல்லை. இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.