India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
₹10, ₹20, ₹50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்., MP மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க இந்த நோட்டுகளை அச்சடிப்பதை RBI குறைத்துள்ளது. இதனால், அன்றாட தேவைகளுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகள் தட்டுப்பாடு எற்பட்டுள்ளதால், ஏழைகளுக்கு நெருக்கடி சூழல் உருவாகியுள்ளதாக விமர்சித்தார். இந்த ரூபாய் நோட்டுகள் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை கமெண்ட் பண்ணுங்க.
இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என சீக்கியர்களை உதாரணம் காட்டி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், தான் பேசியதில் என்ன தவறு என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா எனவும், பாஜகவிற்கு உண்மையை சந்திக்க துணிவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக USA சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, காலிஸ்தான் ஆதரவாளர்களை வரவழைத்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. USA-ல் இயங்கும் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்க வாழ் சீக்கியர்களின் பாதுகாப்பில் அந்நாட்டு அரசு உறுதியாக இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
சுழல் பந்துக்கு சாதகமான IND மைதானங்களில் விராட் கோலி திணறுவதாக EX வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். சச்சினுக்கும் இதே போன்று பல நேரங்களில் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான AUS, SA மைதானங்களில் கோலி சிறப்பாக விளையாடுவதாகவும் பாராட்டியுள்ளார். சுழல்பந்துக்கு சாதகமான சென்னை மைதானத்தில் BAN எதிரான முதல் டெஸ்டில் கோலி திணறியது குறிப்பிடத்தக்கது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சவாலான காரியங்களையும்கூட சாமர்த்தியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக முடிப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பகைவர்களுக்கும் இரங்கும் மனம், சுயமரியாதை உணர்வு, தலைமைப் பண்பு, கற்பனை வளம் ஆகியவற்றை கொண்டிருப்பீர்கள். பழைமையை நேசிக்கும் அதே நேரத்தில் புதுமையையும் விரும்புவீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டிற்கு அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளார். முன்னதாக செப்.23 ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக இருந்த நிலையில், அன்றைய தேதிக்கு மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
திருப்பதி கோயிலில் விரைவில் குடமுழுக்கு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதால் கோயிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் கூறியிருந்தனர். இதனால், கோயிலை தூய்மைப்படுத்த சம்ரோஷணம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு உயிரிழந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்களை தூதரகம் வெளியிடவில்லை. அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து உள்ளூர் போலீசார், உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்து ரசித்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பண்ட், எப்போதும் போல் கூர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அவர் பாராட்டியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பண்ட் 109 ரன்களையும் விளாசினர்.
உதயநிதி எந்த நேரத்திலும் துணை முதல்வராகலாம் என்று செய்திகள் பரவி வரும் நிலையில், அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில், மூத்த தலைவர்களுக்கு பதிலாக இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது உதயநிதியின் திட்டமாக இருக்கிறது. இதனால், சில சீனியர் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.