India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி நெருங்கி வருவதால் மக்கள் வெடி பொருட்களை ரயிலில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்வர். ஆனால் ரயில்வே பாதுகாப்பு விதிகளின் படி அது தவறு. எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஒருவேளை மீறி கொண்டு சென்றால் ரூ.1000 அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். கேஸ் ஸ்டவ், சிலிண்டர்கள், அமிலங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி என எல்லாவற்றிலும் மேற்கத்திய நாடுகளுக்கு இரட்டை வேடம் தான். மற்ற நாடுகளுக்கு சொல்லும் அறிவுரையை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என நாடுகளை அழிப்பார்கள், ஆட்சிகளை கவிழ்ப்பார்கள், மதத்தீவிரவாதத்தை ஊட்டி வளர்ப்பார்கள். ஆனால், நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் தீவிரவாதிகளை அழிக்க முயற்சித்தால், இந்தியாவுக்கு தடை போடுகிறார்கள். இது சரியா?
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஓராண்டு Apprentices பயிற்சி விரும்புவோர் இன்றே விண்ணப்பிக்கலாம். பயிற்சி இடங்கள்: 499. கல்வித் தகுதி: Diploma, B.A, B.Sc, B.Com, BBA, BBM, B.E. வயது வரம்பு: 18-30. தேர்வுமுறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. உதவித்தொகை: ₹8,000 – ₹9,000. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
ரஜினியை வைத்து சண்டை காட்சிகளைப் படமாக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இனி அவர் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், அவரை வைத்து சண்டைக் காட்சிகள் படமாக்கப்படாது எனக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சியான RJD அறிவித்துள்ளது. தாங்கள் 18-20 தொகுதிகளில் வலுவாக உள்ள நிலையில், 12 சீட்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும், BJP-ஐ தோற்கடிக்க 60 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்போம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இருப்பை தக்க வைப்பது, கூட்டணி தர்மம் என இந்தியா கூட்டணிக்கு ஒரே நெருக்கடி தான்.
உங்களுக்கு தெரியாமல், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் இருக்குமானால், <
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதில், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக். 28 முதல் 30 வரை வழக்கமான பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 3 நாள்களில் சுமார் 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என PM மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதால் ஊழலும், குடும்ப அரசியலும் ஒழியும் என்றும் கூறியுள்ளார். பணமில்லை என்றால் பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிட முடியாது என்றிருக்கும் இன்றைய நிலையில், பின்னணி இல்லாத இளைஞர்கள், ஊழலை ஒழிக்கும் லட்சியத்துடன் அரசியலில் சாதிக்க முடியுமா? இதுபற்றி உங்கள் கருத்து?
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். தனியே வேக வைத்த ஆட்டுக்கறித் துண்டுகள், மஞ்சள், உப்பு, பூண்டு, இஞ்சி, கரம் மசாலா, கசகசா போடவும். அதில் தேங்காய், சீரகம், ப.மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்து ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மலபார் மட்டன் குருமா ரெடி.
தமிழக அரசின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாகக் கூறினார். மேலும், பக்தி பகல் வேஷம் போடுபவர்களால் அரசின் சாதனைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.