news

News September 21, 2024

தவமிருக்க முடிவு செய்த பவன் கல்யாண்

image

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தவமிருக்க முடிவு செய்துள்ளதாக தனது X-தளத்தில் பதிவிட்டுள்ளார். குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஷ்வர சாமி கோயிலில் நாளை முதல் 11 நாள்கள் தவமிருந்து, திருப்பதி செல்ல உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திருப்பதி பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்த்த கடந்த கால ஆட்சியாளர்களின் பாவங்களை கழுவ தனக்கு சக்தி கொடுக்குமாறு கடவுளிடம் வேண்ட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 21, 2024

200 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர்

image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதுவரை ODIல் 201* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ENG வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் 534 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

News September 21, 2024

மனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல: குஷ்பு

image

மனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல என குஷ்பு தனது X பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் மேல் தன் குடும்பத்தை வைத்து போற்றுபவன் தான் உன்னதமான மனிதன் எனவும், மனைவியை மதிப்பதென்பது அடிப்படை குணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சுயநலத்தால் செய்யும் தவறுகள் பூமராங்கை போல மீண்டும் உங்களையே தாக்கும் என்றும் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பதிவு யாரை குறிப்பிடுவதாக நினைக்கிறீர்கள்?

News September 21, 2024

அதிக சதங்கள்: புதிய சாதனை படைத்த கில்

image

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் சதம் அடித்த இந்திய வீரர் கில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது 2022 ஆம் ஆண்டுக்குப் பின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் (12) அடித்த வீரர் என்ற சாதனைதான் அது. இந்த பட்டியலில் பாபர் அசாம், ஜோ ரூட் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 10 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

News September 21, 2024

யார் இந்த கே.ஆர்.ஸ்ரீராம்

image

மும்பையில் 1963இல் பிறந்த நீதிபதி <<14160783>>கே.ஆர்.ஸ்ரீராம், <<>>லண்டன் கிங்ஸ் கல்லூரியில் எல்எல்எம் ( கடல் சட்டம்) முதுகலை பட்டம் பெற்றவர். 986இல் மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த அவர், பல்வேறு வழக்குகளை கையாண்டார். 2013இல் மும்பை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாகவும், 2016இல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். தற்போது இவர் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய நபர் சிக்கினார்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி அப்பு கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த அப்பு, ஜூலை 5க்கு பிறகு தலைமறைவானார். முக்கிய சாட்சியமாக கருத்தப்பட்ட அவரை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது. இந்நிலையில் டெல்லியில் பதுங்கியிருப்பதாக அவரை, தனிப்படை போலீஸ் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வருகிறது. அவரிடன் விசாரணை நடத்தினால், மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது.

News September 21, 2024

சர்வதேச அங்கீகாரம் பெறும் யோகிபாபு படம்

image

சீனு.ராமசாமி இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம், 2 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகியுள்ளது. 27 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்ப்பா இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலிலும், 25ஆவது ஆண்டாக நடைபெறும் நியூபோர்ட் பீச் ஃபிலிம் ஃபெஸ்டிவலிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. முன்னதாக, ஆக்லாண்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 21, 2024

சென்னை ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதி நியமனம்

image

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீராமை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்துடன் சேர்த்து 8 டெல்லி, இமாச்சல், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News September 21, 2024

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

மத்திய ஆயுதப் படைகளில் (CAPFs) காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்கள் காவல் படையில் 35,612 இடங்களும், பெண்கள் பிரிவில் 3,869 இடங்களும் உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 18 – 23 வயதுடையவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் அக்.14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

News September 21, 2024

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது

image

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 37 பேர் மூன்று படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அனைவரும் கைது செய்து அழைத்து சென்றுள்ளது. ஏற்கெனவே, 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடும் நிலையில், இலங்கை தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

error: Content is protected !!