India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களின் அன்றாட பயன்பாட்டில் தவிர்க்க முடியாத App ஆக இருக்கும் வாட்ஸ் அப் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய வசதி ஒன்றை அறிமுக செய்ய உள்ளது. இதன்படி தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை வாட்ஸ் அப் தானாகவே பிளாக் செய்யும் வசதிதான் அது. இதை செயல்படுத்த பயனர்கள் செட்டிங்ஸில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
*மேஷம் – ஊக்கத்துடன் செயல்படுங்கள் *ரிஷபம் – மன உறுதியுடன் இருங்கள் *மிதுனம் – பகை உண்டாகும் *கடகம் – வெற்றி நிச்சயம் *சிம்மம் – பண வரவு இருக்கும் *கன்னி – மறதி ஏற்படும் *துலாம் – விவேகத்துடன் செயல்படுங்கள் *விருச்சிகம் – வீம்பு சண்டை தேடி வரும் *தனுசு – மங்களம் உண்டாகும்*மகரம் – ஆதரவு கிடைக்கும் *கும்பம் – கோபம் ஏற்படும் *மீனம் – பாசமான நபர்களை சந்திப்பீர்.
ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர் இருப்பது, நம்முடன் கடவுள் இருப்பது சமம் என பாலிவுட் இயக்குநர் சுபாஷ் காய் தெரிவித்துள்ளார். ஹிந்தி படமான ‘Taal’ வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு பேசிய அவர், இந்த படம் வெளியான போது AR-க்கு 27, தனக்கு 29 வயது ஆனதாக கூறியுள்ளார். மேலும், உள்ளுக்குள் ஒரு குழந்தை இருந்தால் தான், இப்படத்தில் வரும் இசையை போன்று உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இரவில் வெளியே செல்லும்போது, பாதுகாப்பாக செல்லவும்.
தமிழக மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை அட்டூழியங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதே மீனவர்கள் கைதுக்கு ஒரே தீர்வு. கடந்த 50 நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் நடவடிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள போவெக்லியா தீவில்தான் உலகளவில் அதிக பேய்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. வெனிஸ் கடற்கரையில் உள்ள இந்த சிறிய தீவு, பேய்களின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாவாசிகள், சில விசித்திரமான சப்தங்களை கேட்பதாக தெரிவித்துள்ளனர்.
‘ராயன்’ படத்தைத் தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். அப்படத்தையடுத்து ‘இட்லி கடை’ எனும் படத்தை அவர் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமைகளில் பள்ளிகள் அரைநாள் மட்டும் இயங்கும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலாண்டு தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், செப்.28 – அக்.2 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அக்.3 முதல் (வியாழக்கிழமை) பள்ளிகள் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமைகளில் அக்.5, 19, 26, நவ.9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஞ்சாவால் குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 20 நாட்களில் மட்டும் 6 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது எனக் கூறிய அவர், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என விமர்சித்தார். மேலும், மாபெரும் கூட்டணி அமைத்து 2026இல் அதிமுக ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவை வலுப்படுத்த ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரை நீக்கி பொதுக்குழு எடுத்த முடிவு இறுதியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதிபட கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.