India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில்களுக்கு தேவையான நெய், ஆவின் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்படவேண்டுமென ஆணையரால் 2021-ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்ற அவர், பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதாவை சேர்ந்த வினோஜ், செல்வக்குமார் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையில் நாளை செப்டம்பர் 23-ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என்பதால் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் விசேஷ பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
*வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள்.
*துப்பாக்கியை விட யோசனைகள் சக்தி வாய்ந்தவை. நாம் நம் எதிரிகளை துப்பாக்கிகளை வைத்திருக்க விடமாட்டோம், நாம் ஏன் அவர்கள் யோசனைகளை வைத்திருக்க விடவேண்டும்.
*முட்டாளாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் சிலர் அந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்தி., 44.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 60 ▶ குறள்: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.▶ பொருள்: குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. சீனாவுக்கு எதிராக இந்திய அணி களம் இறங்கிய நிலையில், திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றி ஒரு புள்ளிகளை பெற்றார். வைஷாலி, அவந்திகா அகர்வால் தானியா ஆகியோர் டிரா செய்தனர். இதன் மூலம் 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பு மீண்டும் பிரகாசமாகியுள்ளது.
▶ செப்.22 (புரட்டாசி 6) ▶ ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 – 8:45 AM &3:15- 4:15 PM ▶ கெளரி நேரம்: 10:45 – 11:45 AM &1:30 – 2:30 PM ▶ ராகு காலம்: 4:30 – 6:00 PM ▶ எமகண்டம்:12:00 – 1:30 PM ▶ குளிகை: 3:00 – 4:30 PM ▶ திதி: பஞ்சமி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ சந்திராஷ்டமம்: சித்திரை
இன்று (செப். 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். காயத்திலிருந்து மீண்டுவந்த பின் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டுவந்த பண்ட் சதம் அடிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக இந்திய வீரர் கில் தெரிவித்துள்ளார். பண்ட் காயத்திலிருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டார் என்றும், இன்று அதற்கான பலனை பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.